27 ஜூன் 2012

நான்காவது கவிதைத் தொகுதி.

காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ள என் நான்காவது கவிதைத் தொகுதி.

03 ஜூன் 2012

கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.

கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.
எதிர் விளையாட்டு செல்வராஜ் ஜெகதீசன் இடைவேளை நேரங்களில் பள்ளியில் விளையாடும் ஒரு விளையாட்டின் பெயர் ‘எதிர் விளையாட்டு’ என்றான் மகன். ‘சிரி என்றால் அழ வேண்டும் அழு என்றால் சிரிக்க வேண்டும் உட்கார் என்றால் எழ வேண்டும் எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’ அனேகமாய் எல்லா நேரங்களிலும் அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு. அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன் அடியோடு அதை மறந்தே போனேன். அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில் எழுதப்பட்டிருந்தது. 'பேசாதே என்றால் வகுப்பில் பேசிக் கொண்டே இருக்கிறான்’ என்று. o