13 அக்டோபர் 2009

சம்பவம்

பேச்சு
சுற்றி
சுழன்றதொரு
சம்பவத்தைப் பற்றி.

அக்கம் பக்கம்
குறித்தெந்த
அக்கறையுமில்லை
அவர்களிடம்.

சம்பவ இடம்
பற்றியும்
சரியான
தகவலில்லை.

பேச்சின்
சாரத்தை வைத்து
சம்பவத்தை அறிதலும்
சாத்தியப்படவில்லை.

உயிரிழப்பு ஏதுமில்லை
என்றொலித்த
வாக்கியமொன்றோடு
அங்கிருந்து கிளம்புகையில்
சற்று
ஆசுவாசமாயிருந்தது.

o

2 கருத்துகள்: