26 அக்டோபர் 2009

விமான நிலைய வரவேற்பொன்றில்

பயணக் களைப்பாய்
இருக்கலாம்.

போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.

எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.

ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.

சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.

இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு.

o

2 கருத்துகள்:

  1. அன்பு செல்வராஜ் ஜெகதீசன்,

    உங்கள் கவிதைகளை விருட்சத்திலும், உயிரோசையிலும் படித்திருக்கிறேன். தெரிவான சொற்கட்டுமாணம், செரிந்த வார்த்தைகள் கவிதையை மேலும் அழகுறச் செய்கிறது.

    வாழ்த்துக்களுடன் அன்பும்,
    ராகவன்

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ராகவன்.

    பதிலளிநீக்கு