28 டிசம்பர் 2010

அன்புக்கவி

அபிமான எழுத்தாளரின்
பேச்சைக் கேட்க
அங்கில்லாமல் போனதால்
எப்படி இருந்தது
என்றறிய
இரண்டு மூன்று பேரை
அழைத்துப் பேசுகையில்

அப்படியே அவரின்
வழக்கமான பேச்சு
என்றார்கள்.
அதுவாகவே கண்ணீர்
ஐந்தாறு முறை
துளிர்த்ததென்றார்கள்.
அன்பைப் பற்றிதான்
இருந்திருக்கும்
அத்தனையும்.

o
(கல்யாண்ஜி அவர்களுக்கு)

3 கருத்துகள்: