18 ஜூன் 2011

இரண்டு கவிதைகள்

01

பள்ளிப் பேருந்துக்கு
வழியனுப்ப
யாரும் வராத
இன்னொருவனைக் காட்டி
எப்போதிருந்து நானும்
அப்படிப் போவேனென்று
கேட்ட மகனுக்கு
எப்படி சொல்ல
எனக்கு மட்டும் தெரியும்
அவன் கண்களின்
ஏக்கத்தை.

O

02

தவறுதலாய்
நான் அழுத்திய
தளத்தின் எண்
தனக்கானது என்று
புன்சிரிப்போடு
ஒருவருடன்
போக நேர்ந்த
லிப்ட் பயணம் போல
தானாய் இப்படி
எல்லாமே
தவறுகளின்றி
நேருமானால்...

o

4 கருத்துகள்: