19 டிசம்பர் 2011

இரண்டு கவிதைகள்

(19-12 -2011) தேதியிட்ட உயிரோசையில் வெளியானது.



இந்த நாள்

மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை.
இரண்டாவது வந்திருக்கலாம்.
ஒன்று கூட
இல்லாமல் போகுமளவுக்கு
என்னதான் செய்ததிந்த
ஒரு நாள்.

o

புகைப்படத்தில்

என்னையும் உன்னையும் அழைத்தவன்
அவனை அழைக்கவில்லை.
என்னையும் அவனையும் அழைத்த நீ
இவனை அழைக்கவில்லை.
உன்னையும் இவனையும் அழைத்த நான்
அவனை அழைக்கவில்லை.
நான் நீ அவன் இவன்
எல்லோரும் சேர்ந்திருக்கும்
இந்தப் புகைப்படத்தை
என்ன செய்வதிப்போது
என் இனிய நண்பனே.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக