02 பிப்ரவரி 2012

படித்ததில் பிடித்தது - மண்குதிரை கவிதை

நான்

கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி

தேம்பியழுகிறேன்
எனக்குச் சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி

ஆடிக் களைத்த மைதானத்தை
நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவுமில்லை.

o

(புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - காலச்சுவடு வெளியீடு)

2 கருத்துகள்: