30 நவம்பர் 2009

சுருதி லயம்

பிரிந்து கூடும்
கூடிப் பிரியும்
அநேகர் வரவை
கண்டிருந்த
அந்த இடம்

கால தேச
எல்லைகள் கடந்து
பதினோரு
வருடங்களுக்குப்
பின்னிகழ்ந்த நம்
சந்திப்பின்
களமாய் இருந்தது
அன்றைக்கு.

கூடிப் பேசிக்
கழித்ததில்
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா.

ஆயினும்
அன்றைய நம்
முகங்களின்
அறிமுகத்தோடு நாம்
ஆரம்பித்திருந்தால்

சுருதி சற்று
கூடியிருக்கலாம்
நமதந்த
இசைக் கச்சேரியில்.

O

4 கருத்துகள்: