பிரிந்து கூடும்
கூடிப் பிரியும்
அநேகர் வரவை
கண்டிருந்த
அந்த இடம்
கால தேச
எல்லைகள் கடந்து
பதினோரு
வருடங்களுக்குப்
பின்னிகழ்ந்த நம்
சந்திப்பின்
களமாய் இருந்தது
அன்றைக்கு.
கூடிப் பேசிக்
கழித்ததில்
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா.
ஆயினும்
அன்றைய நம்
முகங்களின்
அறிமுகத்தோடு நாம்
ஆரம்பித்திருந்தால்
சுருதி சற்று
கூடியிருக்கலாம்
நமதந்த
இசைக் கச்சேரியில்.
O
சம்மணமிட்டு ரசிக்க வைக்கும் பாகவதமாய் இருக்கிறது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி ஜெகநாதன்.
பதிலளிநீக்கு//கால தேச
பதிலளிநீக்குஎல்லைகள் கடந்து// உங்களின் கவிதையும்
நன்றி velkannan.
பதிலளிநீக்கு