14 பிப்ரவரி 2010

காதலர் தினத்தை ஒட்டி மீள்பதிவாக சில கவிதைகள்

நேசம்

செம்புலப் பெயல் நீர்
ஈரேழு ஜென்மம்
ஈருடல் ஓருயிர்

எவற்றிலும் நீ
எதுவரினும் நீ
எக்கணமும் நீ

இத்தனையும் பேசி
இனித்திருந்த நம் நேசம்
இப்போது இடம்மாறி

என்னவளாய் நீயின்றி
எவரோடோ நீயொன்றி.



எதிர்பார்ப்பு!

அதிக நேரமொன்றும்
ஆகாதுதான்.

ஒருதொலைபேசி
அழைப்பில்கூட
உறுதிசெய்து கொள்ளலாம்.

ஆயினும்,
எதிர்பாரா
ஒரு தருணத்தில்
நீ
எடுத்துத்தரப் போகும்
பிறந்த நாள் பரிசைக்
காண

அமைதியாகவே
வருவேன்.
அநேக
எதிர்பார்ப்புகளோடு.


தடங்கள்

எப்போதும் போல்தான்
இருக்கிறது.
என்னையும் உன்னையும்
பிரித்த நிலா.

இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன.
எதிர்வரும் அலைகளோடு
உள் வாங்கும் அலைகள்.

நீ விட்டுப்போன
தடங்களோடு நான்.
இங்கேயும் அங்கேயும்.

இன்றும் நீ வராமலே
இருந்திருக்கலாம்.
ஏனைய நாட்களைப் போல.

4 கருத்துகள்: