06 செப்டம்பர் 2011

அந்தக் கணம்



விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு
சுற்றுலா சென்ற இடத்தில்
வைத்து நிகழ்ந்த அந்தக் கணத்தை

காலைச் சிற்றுண்டிக்கான
பில் பணத்தைக் கொடுத்துவிட்டு
கல்லாவை விட்டுத் திரும்புவதற்குள்

நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த என்
இளைய மகன் ஒரு காரின் பின்னும்
தலைதெறிக்க அவனைப் பிடிக்க ஓடிய
என்னைத் தொட்டு நின்ற ஒரு காரின் முன் நானும்
என இடைப்பட்டு நின்ற அந்தக் கணத்தை

சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப் போன
அந்த ஒரு கணத்தை
சில சொற்களில் எப்படி சொல்லிவிட முடியும்?

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக