13 September 2011

உயிரோசை



உண்மையை
உண்மையென்று உணர்த்த

இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்

தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.

ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?

o

2 comments:

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்,

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

நன்றி காந்தி.

கருத்துரையிடுக