12 ஏப்ரல் 2010

இங்கு எல்லாம்

இங்கு எல்லாம்
சொல்லப்பட்டு விட்டது.
இங்கு எல்லாம்
எழுதப்பட்டு விட்டது.
இங்கு எல்லாம்
கொடுக்கப்பட்டிருக்கிறது
இங்கு எல்லாம்
எடுக்கப்பட்டும் இருக்கிறது.
இங்கு எல்லாம்
எல்லாமுமாக இருக்கிறது
இங்கு எல்லாம்
எதுவுமற்றதாகவும் இருக்கிறது
எல்லோர்க்கும் எல்லாமென்பது மட்டும்
எப்போதும் ஒலித்தபடி இருக்கிறது
எல்லோராலும் இன்னமும்.

0

10 கருத்துகள்:

  1. ம் .... சரி தான் //..எப்போதும் ஒலித்தபடி இருக்கிறது
    எல்லோராலும் இன்னமும்//
    இவ்வொலி நிற்கவே நிற்காதோ ...

    பதிலளிநீக்கு
  2. தெரியலியே வேல்கண்ணன். (நாயகன் ஸ்டைலில்!!!).
    நன்றி.

    பதிலளிநீக்கு