28 ஆகஸ்ட் 2010

இரு கவிதைகள் (மீள்பதிவு)

1) அந்தரங்கம்

இருவர் பேசிக்கொண்டிருந்த
இடத்தருகே
எதேச்சையாய் போய் நின்றேன்.
அப்படியே பேச்சு நின்று
அமல்படுத்தப்பட்டது அமைதி.

இன்னொருவனுக்கு
அனுமதியில்லாத
இருவரின் அந்தரங்கத்தின்
இடையே புகுந்ததறிந்து
வெறுமே சிரித்து வைத்தேன்
வேறெதுவும் தோன்றாமல்.

(“அந்தரங்கம்” தொகுப்பிலிருந்து)

o

2) இன்னபிறவும்

அநேகமாய்
முடிவதில்லை.

அழகைப் பற்றிய
அவதானிப்பை

அப்படியே
கைமாற்றிவிட.

அதிகபட்சம்
முடிவதெல்லாம்

அதைப்போல
இது என்பதாய்

இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி

இப்படித்தான்
இருக்கிறது

இன்னபிறவும்
இவ்வாழ்வில்.

(“இன்னபிறவும்” தொகுப்பிலிருந்து)

o

4 கருத்துகள்: