30 ஏப்ரல் 2009

பூனைகள்...

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை.

பூனைகள் பொதுவில் வாழும்.
பூனைகள் கூட்டமாய் திரிதல்
பொதுவினில் காண்பதரிது.

பூனைகள் தனித்தும் வாழும்.

வசிக்குமிடம் பற்றியெதுவும்
வரையறைகள் பூனைகளுக்கில்லை.

தகிக்கும் சூழலில் தனித்து
தாழ்தள இடங்களில் நிற்கும்
கார்களுக்கிடையே வாழும்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை.

நிலை குத்தும் பார்வை கொண்டு
நெருங்கும் வரை நின்று வெறிக்கும்.

நேரெதிரே குதித்துக் கடக்கும்
நெடுஞ்சாலை வாகனங்களுக்கிடையில்

இருத்தல் இறத்தல் குறித்தெந்த
முகாந்திரமின்றி முடிந்து போகும்

பூனைகளின் எளிய வாழ்வு.

0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக