28 ஏப்ரல் 2009

கவிதையை முன்வைத்து...

நர்சரி படிக்கும் மகன்
இன்று விளையாட தேர்ந்து கொண்டது
நான் வாசிக்க வைத்திருந்த
கவிதைப் புத்தகங்களில் ஒன்றை.

தொலைதூர பயணமொன்றில்
டேப் ரெகார்டரில் ஒலித்த
பாடலின் வரிகள்
எங்கோ படித்த கவிதை வரிகளின்
இன்னொரு வடிவம்.

முதல் முதல் பார்த்த
தோழியின் கணவரிடம்
சகஜமாக உரையாட முடிந்தது
என் முதல் கவிதைத் தொகுதியை
முன்வைத்து.

மகன் பிறந்த நாள்
கொண்டாண்டத்தின் இடையில்
நண்பனின் மனைவி ஒருவர்
நான் எழுதிய கவிதை ஒன்றை
வரி மாறாமல் சொல்லி
வாழ்த்தியது பாராட்டுமுகமாய்.

நிகழ் கணங்கள் யாவிலும்
நிறைந்து நடை பயிலும்
கவிதையின் கால்தடங்கள்

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக