30 ஏப்ரல் 2009

சாயல்...

இரு தளங்களுக்கிடைப்பட்ட
படிக்கட்டுகளில் வைத்து
காதலைச் சொன்ன கணம்
விழிகள் உருட்டி
மருண்ட உன் முகத்தின்
சாயலேதுமின்றி
இருந்தது
பிரிவதற்காய் நாம்
தேர்ந்து கொண்ட ஒரு
பிற்பகல் வேளையில்
மூடிய லிப்டின் கதவுகள்
உள் வாங்கிப்போன
உன் முகம்.

0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக