29 ஏப்ரல் 2009

இசைவாய்...!

அனேக நேரங்களில்
அடித்துப் பிடித்து ஓடி வரும்
ஒருவனுக்கோ ஒருத்திக்கோ
காத்திருக்க முடியாமல்
விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில்
வெறுமனே இருக்க நேர்கிறது.

யாசிக்கும் கைகளுக்கு
யோசித்துக் கொடுப்பதற்குள்
பெரும்பாலும் நகர்ந்துவிடும்
பேருந்துகளிலும்
இருக்க நேர்கிறது.

முன்பைவிட விரைவாய் நகரும்
இவன் விட்டு நகர்ந்த
வரிசைகளையும்
எப்போதும் காண நேர்கிறது.

வேண்டாத நேரங்களில்
வெறுமனே இருக்கும்
சலூன் நாற்காலிகளையும்
காண நேர்கிறது
கணக்கற்ற பொழுதுகளில்.

எதிர்பாராப் பொழுதொன்றில்
இசைவாய் நிகழும் ஒன்றும்
இவளது வருகையைப் போல.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக