30 ஏப்ரல் 2009

சிறு கவிதைகள்

01

வந்த போதெதுவும்

சூது வாதில்லை.


போவதற்குள் எத்தனை

பொய்ப்பித்தலாட்டங்கள்?.


O

02

இன்றென்ன

கிழித்துவிட்டோம்.


நாளை மீது

நம்பிக்கை வைக்க.


O

03

இன்னொரு காதலென்றால்

இனிக்கத்தான் செய்கிறது.


இருபதிலும்

அறுபதிலும்.


O

04

நெடுநேரம் பறப்பதில்லை

நைந்த நூலில்

நாள்பட்ட காற்றாடி.


o

05

கவியெழுதி பிழைத்தல்

கடினம்.

காதலின்றி சாதல்

போல.

O

06

காதல் போயின்

இன்னொரு காதல்.


O

07

இருந்தவரைக்கும்

ஏறெடுத்துப் பார்க்கவில்லை.


போனபிறகென்ன

பொன்னாடையும்

பூமாலையும்.


O

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக