30 ஏப்ரல் 2009

என் கவிதைகள்...!

பெரும் மமதைக்காரனென்று சொல்.
பித்தலாட்டக்காரன் என்று சொல்.

சிற்றின்பப்பிரியன் என்று சொல்.
சின்னபுத்திக்காரன் என்று சொல்.

சீதாராமன் இல்லை என்று சொல்.
சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.

மதுபுகைக்கு அடிமை என்று சொல்.
மனிதனே இல்லை என்று சொல்.

என்னை
என்ன வேண்டுமானாலும்
சொல்.

என் கவிதைகளும்
என் போல்தானா?
சொல்.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக