30 ஏப்ரல் 2009

மாயமான் விளையாட்டு...

மகன் பிறப்பு குறித்து
நண்பன் ஒருவன்
உதிர்த்த வாசகம்:

"எப்படி இருக்கிறது
நீ படைத்த
கவிதை?"

வாகாய்க் கவிதை செய்ய
வார்த்தைகளோடு
வதைபடும்
மாயமான்
விளையாட்டுகளின்றி

இருக்கவேண்டுமே
இவன் வாழ்வாவது
என்றிருந்தது
எனக்கு.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக