30 நவம்பர் 2009

மீட்டாத வீணை

இங்கிருந்து
போயிருந்த
என்னைப் போலவே
அங்கிருந்து
அவர்கள்
வந்திருந்தார்கள்.
அவரவர்
இடங்களைக் குறித்தே
அதிகமும்
பேசிக்கொண்டிருந்தோம்
அயர்ந்து
திரும்பும் வரை.
தன் பொருட்டும்
ஏகும் விரல்களுக்காக
மீட்டாத வீணையென
காத்திருக்கும்
மீளாத் துயரில்
அந்த இடம்.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக