15 மார்ச் 2011

சுப்ரமணியின் கேள்விகள்



ஒரு குளிர் மாலைப் பொழுதில்
அலுவலக சகா சுப்ரமணியிடமிருந்து
எதிர்கொள்ள நேர்ந்த கேள்விகள்.

இதைப் பற்றி என்றாவது
யோசித்திருக்கிறீர்களா?
எதையோ நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறோம் எப்போதும்.
அடுத்தடுத்த கமிட்மென்ட்
எப்போதும் வேலையில்.
பக்கத்தில் இருப்பவரோடு
பேசிச் சிரிக்கவும்
பெரும்பாலும் நேரமில்லை.
மனைவி மக்களுக்கான நேரம்
வாரக் கடைசியில்.
வாங்கிய நிலமோ
அடுக்கக குடியிருப்போ
வேறெவரோ ஒருவரிடம்
வாடகை என்ற பெயரில்.
வாரத்திற்கொருமுறை நிகழும்
பெற்றோருக்கான அழைப்பும்
வெறும் குசல விசாரிப்புகளோடு.
ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்
இந்த அயலக வாழ்வில்
என்னவென்றே தெரியாமல்.

எல்லாக் கேள்விகளிலும்
என்னைப் பொருத்தியபடி
கேட்டுக் கொண்டிருந்தேன்.

o
(14-03-2011 உயிரோசை மின்னிதழில் வெளியானது)

3 கருத்துகள்: