15 ஆகஸ்ட் 2011

சிறு கவிதைகள்

01

சாந்தியா அது?
சாந்திதான் அது.
சாந்தி என்பது எது?

o

02

படிப்பதா?
படைப்பதா?

O

03

எழுத இருக்கிறது
இன்னும் ஒரு பாதி.

போய்விடுமோ
ப்ரூப் ரீடிங்கிலேயே
மீதி வாழ்வு?

o

04

வெகு எளிதாக
போய்வருகிறான்
வெளிநாடுகளுக்கு
சக எழுத்தாளன்.

கடை பாக்கிக்காக
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறான்
கவி சாம்ராட்.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக