21 செப்டம்பர் 2011

இறைவன் வகுத்த நியதி



நான்கு படிக்கட்டுகளுக்கு ஒரு முறை
தேம்பிய அழுகையும் அதைத் தொடர்ந்த அமைதியுமென
நர்சரி படிக்கட்டுகளில் தாவித் தாவி ஓடின மகனின்
தளிர் நடையைப் பற்றி சொல்லிச் சொல்லி
சிரித்துக் கொண்டிருந்தாள் மனைவி.
நினைத்து நினைத்து நகைத்துக் கொண்டிருந்தேன்
நானும் இங்கு அலுவலகத்தில்.

மகிழ்ச்சியில் முழுப் பிரபஞ்சமும் ஆன பொழுதில்
முத்தாய்ப்பாய் வந்து சேர்ந்த தொலைபேசித் தகவல்
பெரும்கூச்சல் போட்டுக் கொண்டிருப்பவனை
பட்டென்று வந்து கூட்டிப் போ என்றது.
அழைத்து வரப் போன இடத்தில் அறிய நேர்ந்தது
அழுதது அவனல்ல வென்று.

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இந்த சிறிய இன்பத்திலுமா?

o

2 கருத்துகள்: