17 பிப்ரவரி 2010

குழந்தைக் கவிதைகள்

01

முன்பொரு நாள்
சொன்ன கதையை
முழுதாய் திருப்பிச்
சொல்லி வந்தவன்
முடிவைச் சற்று
மாற்றி சொல்லியதில்
தெனாலிராமன்
தன் தவறை
அப்படியே
ஒப்புக் கொண்டிருந்தான்
அரசனிடம்.

கதைகளிலும்
கபடமில்லாமல்
இருக்கின்றனர்
குழந்தைகள்.

0

02

முதலிரண்டு நாள்
என் முறையென்றும்
மூன்றாவது நாள்
தன் முறையென்றும்
சொன்னவன்
தன் முறை நாளன்று
தான் சொன்னது
தவறென்று சொல்லி
அன்றும் என்னையே
கதை சொல்ல வைத்தான்.

குதூகலமாய்
ஒப்புக் கொள்கின்றன
குழந்தைகள்
தன் தவறுகளையும்.

o

3 கருத்துகள்: