01
முன்பொரு நாள்
சொன்ன கதையை
முழுதாய் திருப்பிச்
சொல்லி வந்தவன் 
முடிவைச் சற்று
மாற்றி சொல்லியதில்
தெனாலிராமன்
தன் தவறை
அப்படியே 
ஒப்புக் கொண்டிருந்தான்
அரசனிடம்.
கதைகளிலும்
கபடமில்லாமல்
இருக்கின்றனர் 
குழந்தைகள்.  
0
02
முதலிரண்டு நாள்
என் முறையென்றும் 
மூன்றாவது நாள்
தன் முறையென்றும்
சொன்னவன்
தன் முறை நாளன்று 
தான் சொன்னது
தவறென்று சொல்லி 
அன்றும் என்னையே
கதை சொல்ல வைத்தான்.
குதூகலமாய்
ஒப்புக் கொள்கின்றன 
குழந்தைகள்
தன் தவறுகளையும். 
o
 
 
குழந்தைகளை சிறப்பிக்க கவிதைகளை தவிர வேறு எது
பதிலளிநீக்குமுதல் கவிதை மிகவும் பிடித்து போனது
நல்ல கவிதைகள் செல்வராஜ் ஜெகதீசன்
பதிலளிநீக்குநன்றி வேல்கண்ணன் & லாவண்யா.
பதிலளிநீக்கு