25 டிசம்பர் 2010

படித்ததில் பிடித்தது - இசை

சகலமும்

சகலமும் களைந்து சரிய
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்லத் தடவிக் கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

O

பூனை

பூனை ஒரு விலங்கு
அதற்குத் தெரிந்திருக்கிறது
ப்ரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக்கொள்வதென
ஸ்பரிசிக்கும் போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென

O

உறுமீன்களற்ற நதி தொகுப்பு/இசை/காலச்சுவடு வெளியீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக