21 ஆகஸ்ட் 2011

இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன்
சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான்.
அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை
இழுத்துப் பிடித்து உட்கார வைத்து
புத்தகம் ஒன்றைக் காட்டி 'ஏ' 'பி' என்று சொல்லச் சொன்னாள் அம்மா.
நழுவித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான் பையன்
இன்னொரு பாடலைப் பாடியபடி.

o

3 கருத்துகள்:

  1. இம்ம்ம் என்னத்த சொல்ல, உலகம் முன்னேறுதா இல்லை பின்னோக்குதான்னு தெரியல. அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. முடிந்தால் என் தளத்தையும் பார்வையிடுக www.panangoor.blogspot.com

    பதிலளிநீக்கு