23 ஜூன் 2013
ரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள்
[செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’நூலை முன்வைத்து]
- ப.தியாகு
•
இன்னும் சற்று மேம்பட்டதாக
இன்னும் சிறிது சுரத்துள்ளதாக
இன்னும் கொஞ்சம் உவப்பானதாக
இன்னும் எப்படியெல்லாமோ
இருந்திருக்கலாம் என்கிறீர்கள்
இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்
இதையும் எப்படியாவது புரிந்துகொள்ளுங்கள்
ஏனைய பிற யாவற்றையும் போல.
செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் ஒன்று ’இதையும்’ என்னும் தலைப்பின்கீழ் வரும் இக்கவிதை. தொகுப்பின் இரண்டாவது கவிதையான இக்கவிதையை வாசிப்பில் கடந்து சென்று, கடைசி கவிதையையும் வாசித்து முடித்து, அடுத்து நாம் அவர்முன் வைக்கவிருக்கும் தொகுப்பின் மீதான விமர்சனங்களுக்கான அவரின் மொத்த பதிலாக முன்கூட்டியே அமைந்துவிடுவதில் தனிச்சிறப்பு பெறும் கவிதை இது.
சரிதான், இனி பேச ஒன்றுமில்லை என்று அமைதி காத்திடவும், ரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள் விட்டு விடுவதில்லை.
நிச்சலன முகமோடு
நின்று அசைபோடும்
யாதொரு மந்தையை விட்டும்
எளிதில் பிரிந்து செல்லாத
கட்டி இழுத்து வரும்போதும்
கம்பீரமாய் நடந்துவரும்
ஏனிந்த கழுத்தறுப்பு என்று
எதிர்கேள்வி கேட்காத
கிடை ஆடுகள்
அத்தனை
ருசியானவையும் கூட.
இக்கவிதையின் கடைசி வரி தரும் அதிர்ச்சியிலிருந்து மீளவும் சிறிது நேரமாகிறது. முந்தைய வரிகளில் இழையோடும் கிடை ஆடுகள் மீதான ஜீவகாருண்யம், பரிவு, கருணை எல்லாவற்றையும் ’அத்தனை ருசியானவையும் கூட’ என்னும் கடைசி வரி கலைத்துப்போடுகிறது. முந்தைய வரிகள்வரை அன்பு, வாஞ்சையின் பாற்பட்டிருந்தவரை ஓரிரு கணம் தடுமாறச்செய்கிறது.
அடுத்து ’ரயில் கவிதைக’ளில் முக்கியமானதும் முகத்திலறைவதுமான கவிதை ஒன்று,
வழித்து உட்கார ஏலாமல்
வழியில் நின்ற ரயிலை
வசைபாடியபடி நின்றுகொண்டிருக்கிறாள்
வயக்காட்டு ஓரம்
இன்னும் அடிப்படை வசதிகள் காணாத புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின், கிராமப்புற வாசிகளின், குறிப்பாக பெண்களின் பயன்பாட்டிலிருக்கும் மலங்கழிக்கும் காடுகளை, குறுக்கிடும் பாதையில் ரயில் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுகையில் ஒரு பெண் அடையும் குற்றவுணர்ச்சியை, சங்கடத்தை துல்லியமான காட்சியாக்கித் தரும் சிறந்த கவிதை. இதுமட்டுமின்றி அவர்களின் இந்த பரிதாப நிலை, வரும் போகும் நேரங்களை கருத்தில் கொண்டு தாம் மலங்கழிக்கும் நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளும் அவர்களின் அவஸ்தை என்று பலவாறாக சிந்தனையில் ஆழ்த்துகிறது இக்கவிதை.
ஆண்களேதுமின்றி
அழகிய பெண்ணொருத்தியோடு
ஆறேழு மாடி வரை
பயணிக்க நேர்ந்திருக்கிறது
இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த
இரண்டு பெண்களுக்கிடையிலும்
இருக்க நேர்ந்திருக்கிறது
எத்தனையோ முறை
முழுக்கவும் பெண்கள் சூழ
மேற்கொண்ட பயணங்களுமுண்டு
ஆகக்கூடி வாய்த்த
அத்தனை லிப்ட் பயணங்களிலும்
அடியேன் கண்டெடுத்தது
நண்பர்களே
இயல்பாய் இருப்பதில்
இருக்கும் அத்தனை
சிரமங்களையும்.
ஆண், பெண் எனக் கலந்து அன்னியர்களோடு லிஃப்ட்-ல் மேற்கொள்ளும், ஒரு நிமிடமே காணும், மூன்று மாடிகள் வரையிலான பயணமே சிலபேரான நம்மை நெளியவிடும், வெட்கம் போலவொன்று பிடுங்கித்தின்னும். தன்னைத்தவிர வேறு ஆண்களின்றி பெண்ணோடு / பெண்களோடு அதுவும் ஆறேழு மாடிகள் வரை பிரயாணம் பண்ணுவதின் சிரமத்தை சொல்லும் இக்கவிதை, நம்மில் பலரின் / சிலரின் அனுபவத்தொடு பொருந்தி ரொம்பவும் ரசிக்கவைக்கிறது.
மேலும் சொல்லத்தகுந்த கவிதைகள் பல இருக்கின்றன தொகுப்பில், பின்னும், சமரசம் செய்துகொள்ளமுடியாத சில கவிதைகளை மட்டும் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் வைக்கவே விரும்புகிறேன்.
•
ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைகள்)
செல்வராஜ் ஜெகதீசன்
•
விலை : ரூ.50
வெளியீடு:
அகநாழிகை பதிப்பகம்
தொடர்பு எண்: 9994541010
•
நன்றி : Thiyagu Panneer
09 ஜனவரி 2013
அனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்" - மதிப்புரை
08 ஜனவரி 2013
17 டிசம்பர் 2012
03 அக்டோபர் 2012
நான்காவது சிங்கம் ஒரு பார்வை - வித்யாஷங்கர்
(நன்றி: திரு. வித்யாஷங்கர்)
மொழியின் உச்சம் கவிதை
தமிழில் கவிஞன், கவிதை என்பதே கேலிக்குரியதாக இருப்பதற்கு காரணம் திராவிட,
இடதுசாரி இயக்கங்கள்.
மொழியின் பரிசோதனை கூடமாகவும், ஆன்மாவாகவும்
இருப்பது கவிதை!
காதலை பொய் என்றாயே
கவிதையை கள்ளச் சொல் என்றாயே
அன்று பிரியும் வேளையில்
உண் கண்கள் கலங்கியதென்ன
காதல் அல்லாமல்
வார்த்தையின் வனப்புதான்
என்ன கவிதையல்லாமல்
என்ற கு.பா.ராவின் கவிதைகளிலிருந்து எளிய நேரடித் தண்மை கைவரப்பெற்று எனது அனுபவங்களை
கவிதை என்று எழுதி வருகிறேன்.
தினமும் எழுத வேண்டிய நிர்பந்தத்தில் வாழும் எனக்கு கவிதை எழுதுவது - ஆசுவாசுமானதளம்.
எந்த கட்டுப்பாடோ ஒழுங்கோ அற்று எனது உள்தெறிப்பை, கவிதையாக எழுதுகிறேன். அதை பத்திரிகைகளுக்கு
அனுப்புவதோ, புத்தகமாக வெளியிடுவதோ கூட எனக்கு ஆர்வமற்றது. விக்ரமாதித்யன் கேட்டுக் கொண்டதற்காக
எழுதியது, அவருக்கு அனுப்பியது என்பதுதான் எனது வெளியீட்டுத்தளம். யுகபாரதி பலமுறை போனில்
கேட்டு வெளியானதும் உண்டு. சமீபகாலமாக அம்ரா பாண்டியன் அதை செய்கிறார். பேஸ்புக் வந்த பின்
அவ்வப்போது நானே அதில் எழுதிவிடுகிறேன்.
கவிதை எழுதுவது என்பது எனக்கான தனித்த மது அருந்தும் அறை.
அதில் உலகமில்லை; அப்போது நான் உலகில் இல்லை.
சமீபத்தில் எழுதி வரும் உவப்பான கவிஞர்களுள் ஒருவராக செல்வராஜ் ஜெகதீசன் படுகிறார்.
அவரது நான்காவது சிங்கம் அவரை இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறது.
சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப்போன
அந்தக் கணத்தைச் சொற்களில்
எப்படிச் சொல்லி விட முடியும்?
அங்காடியொன்றில் காணாமல் போன தினம்
அவனது இருப்பை அறிவித்ததும் அந்த பாய் தான்.
உண்மையில் இருந்ததா
உனக்கு
அசலாய் ஒரு முகம்
அன்றைக்கு
தேவிகா சுப்ரமணியம் கவிதை, ஏற்புடையதாய், எல்லாமே இப்படி, சுப்ரமணியின் கேள்விகள்,
எதிர் விளையாட்டு, ஆசைமுகம், உயிரோசை, சிலருக்காவது, கவிசாம்ராட்,
இப்படி பல தலைப்பு கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
பெற்றோரைப் பேணாத
பிள்ளையென்ன பிள்ளை?
பேரீரைச்சல் இல்லாத
அருவியென்ன அருவி?
பேரின்பம் காணாத
பிறவியென்ன பிறவி?
சிற்றின்பம் துறக்காத
துறவியென்ன துறவி?
மனைவியர் நோகப் பண்ணும்
கணவனென்ன கணவன்?
மனதில் கல்மிஷம் கொண்டவையும்
பிறப்பென்ன பிறப்பு?
விமர்சனங்களைத் தாங்காத
கலைஞன் என்ன கலைஞன்?
பழைய வடிவுக்குள் அடக்கி விடக்கூடியதாயினும் இதுவே உங்களது வெளிப்பாடான
பூரண கவிதையாக எனக்குப்படுகிறது.
குழந்தையை பிரிந்து தொலைதூரத்தில் வாழும் தந்தையின் பதற்றமாக, பல கவிதைகளில்
பையன்களை பதிவு செய்திருப்பது தங்களது பாசத்தின் ஆழத்தை காட்டுகிறது.
நீங்கள் கண்டடைந்து வீட்டீர்கள்;
தொடர்ந்து எழுதுங்கள்;
சோர்வுறாதீர்கள்.
அவை இன்னும் கூர்மையுறும் போது, கவிதை உங்களை வந்தடையும்
உங்கள்
வித்யாஷங்கர்.
15 ஆகஸ்ட் 2012
திரு. செல்வராஜ் ஜெகதீசன் கவிதை நூலுக்கான முன்னுரை - கலாப்ரியா
(நன்றி : திரு கலாப்ரியா)
நான்காவது சிங்கம்....
கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதென்பதில் விக்ரமாதித்ய நம்பிதான் என்னை ஈடுபடுத்தினார் என்று சொல்ல வேண்டும்.கவிதைகள் பற்றி”நல்லா இருக்கு, நல்லா இல்லை” என்று ஒற்றை வரி அபிப்ராயமே சொல்லி வந்த என்னை,மேட்டுப்பாளையம் ‘நிஷா ’ எழுதிய “முகங்கள் கவனம்”என்ற தொகுப்பிற்கு முன்னுரை எழுதுமாறு என்னிடம் சொன்னார்.நான் முயற்சிப்பதாய்ச் சொன்னேன்.கவிதைகளைப் படித்த போது அவை நன்றாகவே இருந்தன.நிஷா நல்ல வாசகர்.நிறைய நூலகளை வாசிப்பார். நாங்கள் இருவரும் நிறைய புத்தகங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.
முன்னுரை எழுதுவதில், பெரும்பாலானவர்களைப் போல்ப் பெரிதும் நல்ல விதமாகவும், சிறு சிறு குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மறு பரிசீலனை செய்யலாம், அல்லது தவிர்த்திருக்கலாம் என்று சொல்லும் வழக்கமான முறையையே தேர்ந்தெடுத்தேன். தமிழின் சில முக்கியமான ஆளுமைகள் எழுதியுள்ள முன்னுரைகளில், பிரஸ்தாபக் கவிஞரின் காலத்திய மூன்று பேருடன்.... சம்பந்தப்பட்ட கவிதைகளையும் ஒரு ஒப்பு நோக்கில் பார்த்து இவரை விட இவர் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று எழுதியிருக்கிறார்கள்.அத்தோடு அந்தக்காலத்திய கவிதைகளைப் பற்றியும் எழுத அதை ஒரு களமாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள். இதன் சாதக பாதகங்கள் பற்றி நான் சொல்லப் போவதில்லை.எனக்கு அது உவப்பானதாக இருந்ததில்லை.
மரபுக் கவிதைகளைப் பொறுத்து அவற்றின் யாப்பமைதியை அதன் ஒரு கூறாக எடுத்துக் கொண்டு அதை வைத்தே அதனைப் பற்றிய கருத்துக்களைக் கூற முடியும். நவீன கவிதைகளைப் பொறுத்து அந்தச் சாத்தியமும் கிடையாது.இதன் பன்முகத்தன்மையோடு கூடிய உள்ளடக்கம் வாசிப்பவனுக்கு ஒரு பெரிய சவாலை முன் வைக்கின்றன. மன்னர்கள் காலத்தில், ஒரு தனி மனிதனின் வாழ்வு என்பதும் மன்னனின் வாழ்வாகவே இருந்தது’ காமத்துப்பாலில் ஒரு குறள் வருகிறது. “வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து மாலை அயர்கம் விருந்து.” “ராசா சீக்கிரமாச் செயிக்கட்டும், நீயும் சீக்கிரமா வா, நாம சந்தோஷமா வீட்டில ‘கூடு’வோம்....’என்று ‘தலைவி’ கூறுகிறாள். இன்றையக் கால மனிதனின் வாழ்வும் அரசியலும் பொது, சமூக நிகழ்வுகளிலிருந்து மிகவும் தனித்து இருக்கிறது. ஆனாலும் அதன் ‘அரசை’ விட்டு அவனால் வெகுவாகவும் விலகி நிற்க முடியவில்லை.முடியாது.
இன்றைய நவீன (இந்திய) மனிதனுக்கு, உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்த நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாக்வோ தங்கள் பாதிப்பைச் செலுத்துகின்றன. சத்யஜித்ரேயின் “ஆஷானி சங்கேத்” (தூரத்து இடி) சொல்லும் சங்கேதமும் இதுதான். எங்கேயோ நடக்கும் போர் ஒரு வங்காளக் கிராமத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது.என்பதுதான் அதன் கதை. இன்றைய மனிதனை உலக அரசியலோடு, பொருளாதாரச்சிக்கலோடு அவனறியறியாத ஒரு சங்கிலிக்கட்டு பிணைத்தே இருக்கிறது. ஆனாலும் அவனளவில் அவன் ஒரு சின்ன ‘இருப்பு’க்குள்ளேயே இருக்கிறான்.அதனாலேயே அவனது கவிதை மொழி சிக்கலானதாகவும் மையமற்றும் இருக்கிறது.
செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் சிக்கலானதாக இல்லை. ஆனால் நவீன மனிதனுக்குள்ள எல்லாச் சிக்கல்களும் அதில்வெளிப்படுகின்றன.
“எல்லாமே இப்படி”
தவறுதலாய் நான் அழுத்திய
தளத்தின் எண் தனக்கானது என்று
புன்சிரிப்போடு ஒருவருடன்
போக நேர்ந்த
லிஃப்ட் பயணம் போல
தானாய் இப்படி எல்லாமே
தவறுகளின்றி நேருமானால்........
சந்தோஷமாக இருக்குமா, கஷ்டமாக இருக்குமா,என்ன விதமாக இருக்கும் என்று தான் சொல்லாமல் அதை வாசகனின் அபிப்ராயத்திற்கு விட்டு விடுகிறார்.கவிதை அங்கேதான் சிறக்கிறது. (இதில் என்ன இருக்கிறது ? என்று கேட்பாரும் இருக்கக் கூடும்) ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், லிஃப்ட்டில், ஆண்கள் எங்கள் ஐவருடன், ஒரு பெண்ணும் இருந்தார்.நான்கு பேரிடமிருந்து ஆல்கஹால் வாடை நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.அவர்கள் நான்கு பேரும் மறுபடி பாருக்கு மேல் மாடிக்குப் போகிறார்கள்.நான் மூன்றாவது மாடியில், அந்தப் பெண்ண்ணுடன் வெளிப்போந்தேன். அவள் நான்காவது தளத்திற்குப் போக வேண்டும் போலிருக்கிறது.வாசனை பொறுக்காமல்தான் இறங்கி விட்டீர்களா என்றேன். “ இல்லையே என் கணவரும் அதில்தானே போகிறார், எல்லோரும் அவரது நண்பர்கள்தான்” என்றார். எனக்கு இந்தக் கவிதை அந்த அனுபவத்தை நினைவுபடுத்தியது.
என்ன சொல்ல
இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச்சிரிக்கும் அந்தக் கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?
எனக்கு இந்தக் கவிதையில் வரும் ’அந்தக்கண்கள்’ யாருடையவை என்று கூறாதது சிறப்பாகப் படுகிறது. அது ஆணாகவும் இருக்கலாமில்லையா என்று எண்ணும் போது கவிதையின் ஆழம் எனக்கு வேறு படுகிறது. பொதுவாகவே, கவிதையைத் தானே வாசித்து அனுபவிப்பது என்பது வேறு’. ஒருவர் விளக்கி அனுபவிப்பது என்பது வேறு.அதனால் ஜெகதீசனின் கவிதைகளை நான் வாசிக்கும் போது அவை எனக்கு ஒருபேரனுபவத்தைத் தந்தது’
கோலாகலம்
சுற்றி விடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்த்து
ஒவ்வோர் முறையும்
ஒரோர் மாதிரி
குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.
இது,தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று.ஒரு தட்டு சுழன்று விழும் நிகழ் தகவு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் கோலாகலத்தின் ஜாடை எப்போதும் எங்கேயும் யாரிடமும் ஒன்றுதான்.மாறாக துயரின் ஜாடைகள் வெவ்வேறு விதமாக இருக்கும். “இன்னொரு சந்தர்ப்பம்“ என்றொரு கவிதை எத்தனை முறை நமக்கு வாழ்வதற்குச் சந்தர்ப்பம் தந்தாலும் நாம் அதை முற்றிலும் சரியாக வாழ்ந்து விட முடியாது. அல்லது ஒன்றில் தவறவிட்ட கொண்டாட்டங்களை இன்னொன்றில் கொண்டாடியோ, அபத்தங்களை திருத்தியோ வாழ்ந்து விடமுடியாது. இப்படி நிறைய யோசிக்க வைக்கிற கவிதை இது.
“பால்க் கிண்ணத்தின்
விளிம்பில்
ஓர் எறும்பு
பால் குடிக்குமோ
உயிர் முடிக்குமோ”
இது நாற்பது வருடமாக என் நோட்டைக் காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஒரு கவிதை. இதை வாசித்தது வண்ணதாசனும் கணபதியண்ணனும் மட்டுமாகத்தான் இருக்க முடியும். ‘பால் குடிக்குமோ’ என்கிற வரிக்குப் பதில் ‘பசி முடிக்குமோ’ என்று எழுதவே எனக்குச் சம்மதம். அப்படி எழுதினால் உயிர் முடிக்குமோ, வுடன் அது ஒத்துப் போக மறுக்கிறது. அல்லது பால்க்கிண்ணத்தில் வருகிற ’பால்’ முட்டுகிறது. கூறியது கூறல் என்பதல்ல தடங்கல். வேண்டுமானால் அது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கலாம்.”தளை தட்டுதல்’’ போல ஏதோ தட்டுகிறது. பசி வெறுக்குமோ உயிர் துறக்குமோ…”என்றும் எழுதிப் பார்த்தேன்.அது எறும்பின் பாஷையாயில்லை. மொத்தத்திலும் இதில் கவிதாம்சம் குறைவு என்று பால குமாரனோ யாரோ சொன்ன நினைவு.. அதனாலும் பிரசுரிக்க மனமில்லை.
இதே போல் ’குரலகள்’என்றொரு கவிதை- நாடக மேடையில், பார்வையாளருக்குத் தெரியாமல் ஓரமாக ஒளிந்திருந்து வசனத்தை மறக்கிற பாத்திரங்களுக்கு அதை ‘எடுத்துக் கொடுக்கிற‘ப்ராம்ப்ட்டர்’ (PROMPTER)பற்றிய கவிதையொன்று. அதுவும் சுத்த ‘உரைநடையாக’ இருக்கிறது என்று ராஜுவோ பாலகுமாரனோ சொன்னார்கள்.அப்போது எங்களுக்கிடையே கடித/ கவிதைப் பரிமாற்றங்கள் நடக்கும்...அதனால் அது எங்குமே பிரசுரமாகவில்லை.
இவற்றையெல்லாம் ஏன் சொல்ல வருகிறேனென்றால். ஒரு தொகுப்பு என்று வருகிற போது சில, கவிதைகள் போல் உள்ள கவிதையாய் இல்லாதவற்றை தவிர்க்க வேண்டும். இந்தத் தொகுப்பில் ’காதல் விளையாட்டு’ என்றொரு கவிதை.அது கவிதையாக மாற மறுக்கும் ஒரு கூற்று. அதை நிர்த்தாட்சண்யமாகத் தவிர்த்திருக்கலாம். ’சூடாப்பூ’ போன்ற கவிதைகள் நிறைய எழுதப் பட்டாயிற்று.அதே போல் “கவி சாம்ராட்”.
“எவ்வளவு தூரத்தையும்”,இழைபிரிதல்” ஆகிய அற்புதமான் கவிதைகளை மறு படி மறுபடி படிக்கத் தோன்றுகிறது. அவை உங்களுக்கே அதிகம் பிடித்த கவிதையாயிருக்கும். அப்படிக் கவிதைகளைத்தான் எழுத வேண்டும்.
முகம் திரும்பா பிரிதல்கள்
என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை
எப்போதும் பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா பிரிதலகள்’
ஐம்பது வருடமாக நான் அனுபவிக்கும் துயர். இந்தத் துயர சுருதியின்( Melancholic mood) ரீங்காரத்தில்த்தான் என் ஆதிக்கவிதைகள் தங்கள் ராக விந்நியாசத்தைக் கண்டன. இது பொதுமைப்படும் போதுதான் அற்புதமான கவிதைகள் உருவாகின்றன என்கிறார்கள்.”
வண்ணதாசன் “உங்கள் முந்திய ஒரு தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல உங்கள் அயலக வாழ்வின் சோகங்கள் உங்களுக்கு ஒரு கவி மனத்தை உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் அருவியாய்க் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள், கவிதைகளையும் கவிதை சார்ந்தும்.இது ரொம்ப முக்கியமானது.
இரு தளப் பார்வைக்குப் புலப்படாத அசோக ஸ்தூபியின்,நான்காவது சிங்கமென உங்கள் முந்திய தொகுப்புகளில் நன்கு தெரியாமல் மறைந்திருந்த நான்காம் கவிச் சிங்கம் இந்தத் தொகுப்பில் துலாம்பரமாகத் தெரிகிறது.
இது உங்கள் தொடர் வாசிப்பு, மற்றும் கவிதா ஈடுபாட்டின் வெற்றி. கவிதைகளின்பால் உங்களது இந்த ஈடுபாடு மிக்க அன்பு,உங்கள் கவிதைப் பயணத்தில் உங்களை எவ்வளவு தூரமும், எவ்வளவு காலமும் அழைத்துச் செல்லும்.
இந்தப் பூமிப் பாத்திரத்தில் எந்த அவநம்பிக்கையுமின்றி தினமும் பூக்கிற ஆயிரமாயிரம் பூக்களைப் போல், நீங்கள் தொடர்ந்து கவிதைகள் தருவீர்கள். என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன்
கலாப்ரியா
இடைகால்
நான்காவது சிங்கம்....
கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதென்பதில் விக்ரமாதித்ய நம்பிதான் என்னை ஈடுபடுத்தினார் என்று சொல்ல வேண்டும்.கவிதைகள் பற்றி”நல்லா இருக்கு, நல்லா இல்லை” என்று ஒற்றை வரி அபிப்ராயமே சொல்லி வந்த என்னை,மேட்டுப்பாளையம் ‘நிஷா ’ எழுதிய “முகங்கள் கவனம்”என்ற தொகுப்பிற்கு முன்னுரை எழுதுமாறு என்னிடம் சொன்னார்.நான் முயற்சிப்பதாய்ச் சொன்னேன்.கவிதைகளைப் படித்த போது அவை நன்றாகவே இருந்தன.நிஷா நல்ல வாசகர்.நிறைய நூலகளை வாசிப்பார். நாங்கள் இருவரும் நிறைய புத்தகங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.
முன்னுரை எழுதுவதில், பெரும்பாலானவர்களைப் போல்ப் பெரிதும் நல்ல விதமாகவும், சிறு சிறு குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மறு பரிசீலனை செய்யலாம், அல்லது தவிர்த்திருக்கலாம் என்று சொல்லும் வழக்கமான முறையையே தேர்ந்தெடுத்தேன். தமிழின் சில முக்கியமான ஆளுமைகள் எழுதியுள்ள முன்னுரைகளில், பிரஸ்தாபக் கவிஞரின் காலத்திய மூன்று பேருடன்.... சம்பந்தப்பட்ட கவிதைகளையும் ஒரு ஒப்பு நோக்கில் பார்த்து இவரை விட இவர் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று எழுதியிருக்கிறார்கள்.அத்தோடு அந்தக்காலத்திய கவிதைகளைப் பற்றியும் எழுத அதை ஒரு களமாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள். இதன் சாதக பாதகங்கள் பற்றி நான் சொல்லப் போவதில்லை.எனக்கு அது உவப்பானதாக இருந்ததில்லை.
மரபுக் கவிதைகளைப் பொறுத்து அவற்றின் யாப்பமைதியை அதன் ஒரு கூறாக எடுத்துக் கொண்டு அதை வைத்தே அதனைப் பற்றிய கருத்துக்களைக் கூற முடியும். நவீன கவிதைகளைப் பொறுத்து அந்தச் சாத்தியமும் கிடையாது.இதன் பன்முகத்தன்மையோடு கூடிய உள்ளடக்கம் வாசிப்பவனுக்கு ஒரு பெரிய சவாலை முன் வைக்கின்றன. மன்னர்கள் காலத்தில், ஒரு தனி மனிதனின் வாழ்வு என்பதும் மன்னனின் வாழ்வாகவே இருந்தது’ காமத்துப்பாலில் ஒரு குறள் வருகிறது. “வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து மாலை அயர்கம் விருந்து.” “ராசா சீக்கிரமாச் செயிக்கட்டும், நீயும் சீக்கிரமா வா, நாம சந்தோஷமா வீட்டில ‘கூடு’வோம்....’என்று ‘தலைவி’ கூறுகிறாள். இன்றையக் கால மனிதனின் வாழ்வும் அரசியலும் பொது, சமூக நிகழ்வுகளிலிருந்து மிகவும் தனித்து இருக்கிறது. ஆனாலும் அதன் ‘அரசை’ விட்டு அவனால் வெகுவாகவும் விலகி நிற்க முடியவில்லை.முடியாது.
இன்றைய நவீன (இந்திய) மனிதனுக்கு, உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்த நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாக்வோ தங்கள் பாதிப்பைச் செலுத்துகின்றன. சத்யஜித்ரேயின் “ஆஷானி சங்கேத்” (தூரத்து இடி) சொல்லும் சங்கேதமும் இதுதான். எங்கேயோ நடக்கும் போர் ஒரு வங்காளக் கிராமத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது.என்பதுதான் அதன் கதை. இன்றைய மனிதனை உலக அரசியலோடு, பொருளாதாரச்சிக்கலோடு அவனறியறியாத ஒரு சங்கிலிக்கட்டு பிணைத்தே இருக்கிறது. ஆனாலும் அவனளவில் அவன் ஒரு சின்ன ‘இருப்பு’க்குள்ளேயே இருக்கிறான்.அதனாலேயே அவனது கவிதை மொழி சிக்கலானதாகவும் மையமற்றும் இருக்கிறது.
செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் சிக்கலானதாக இல்லை. ஆனால் நவீன மனிதனுக்குள்ள எல்லாச் சிக்கல்களும் அதில்வெளிப்படுகின்றன.
“எல்லாமே இப்படி”
தவறுதலாய் நான் அழுத்திய
தளத்தின் எண் தனக்கானது என்று
புன்சிரிப்போடு ஒருவருடன்
போக நேர்ந்த
லிஃப்ட் பயணம் போல
தானாய் இப்படி எல்லாமே
தவறுகளின்றி நேருமானால்........
சந்தோஷமாக இருக்குமா, கஷ்டமாக இருக்குமா,என்ன விதமாக இருக்கும் என்று தான் சொல்லாமல் அதை வாசகனின் அபிப்ராயத்திற்கு விட்டு விடுகிறார்.கவிதை அங்கேதான் சிறக்கிறது. (இதில் என்ன இருக்கிறது ? என்று கேட்பாரும் இருக்கக் கூடும்) ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், லிஃப்ட்டில், ஆண்கள் எங்கள் ஐவருடன், ஒரு பெண்ணும் இருந்தார்.நான்கு பேரிடமிருந்து ஆல்கஹால் வாடை நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.அவர்கள் நான்கு பேரும் மறுபடி பாருக்கு மேல் மாடிக்குப் போகிறார்கள்.நான் மூன்றாவது மாடியில், அந்தப் பெண்ண்ணுடன் வெளிப்போந்தேன். அவள் நான்காவது தளத்திற்குப் போக வேண்டும் போலிருக்கிறது.வாசனை பொறுக்காமல்தான் இறங்கி விட்டீர்களா என்றேன். “ இல்லையே என் கணவரும் அதில்தானே போகிறார், எல்லோரும் அவரது நண்பர்கள்தான்” என்றார். எனக்கு இந்தக் கவிதை அந்த அனுபவத்தை நினைவுபடுத்தியது.
என்ன சொல்ல
இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச்சிரிக்கும் அந்தக் கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?
எனக்கு இந்தக் கவிதையில் வரும் ’அந்தக்கண்கள்’ யாருடையவை என்று கூறாதது சிறப்பாகப் படுகிறது. அது ஆணாகவும் இருக்கலாமில்லையா என்று எண்ணும் போது கவிதையின் ஆழம் எனக்கு வேறு படுகிறது. பொதுவாகவே, கவிதையைத் தானே வாசித்து அனுபவிப்பது என்பது வேறு’. ஒருவர் விளக்கி அனுபவிப்பது என்பது வேறு.அதனால் ஜெகதீசனின் கவிதைகளை நான் வாசிக்கும் போது அவை எனக்கு ஒருபேரனுபவத்தைத் தந்தது’
கோலாகலம்
சுற்றி விடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்த்து
ஒவ்வோர் முறையும்
ஒரோர் மாதிரி
குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.
இது,தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று.ஒரு தட்டு சுழன்று விழும் நிகழ் தகவு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் கோலாகலத்தின் ஜாடை எப்போதும் எங்கேயும் யாரிடமும் ஒன்றுதான்.மாறாக துயரின் ஜாடைகள் வெவ்வேறு விதமாக இருக்கும். “இன்னொரு சந்தர்ப்பம்“ என்றொரு கவிதை எத்தனை முறை நமக்கு வாழ்வதற்குச் சந்தர்ப்பம் தந்தாலும் நாம் அதை முற்றிலும் சரியாக வாழ்ந்து விட முடியாது. அல்லது ஒன்றில் தவறவிட்ட கொண்டாட்டங்களை இன்னொன்றில் கொண்டாடியோ, அபத்தங்களை திருத்தியோ வாழ்ந்து விடமுடியாது. இப்படி நிறைய யோசிக்க வைக்கிற கவிதை இது.
“பால்க் கிண்ணத்தின்
விளிம்பில்
ஓர் எறும்பு
பால் குடிக்குமோ
உயிர் முடிக்குமோ”
இது நாற்பது வருடமாக என் நோட்டைக் காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஒரு கவிதை. இதை வாசித்தது வண்ணதாசனும் கணபதியண்ணனும் மட்டுமாகத்தான் இருக்க முடியும். ‘பால் குடிக்குமோ’ என்கிற வரிக்குப் பதில் ‘பசி முடிக்குமோ’ என்று எழுதவே எனக்குச் சம்மதம். அப்படி எழுதினால் உயிர் முடிக்குமோ, வுடன் அது ஒத்துப் போக மறுக்கிறது. அல்லது பால்க்கிண்ணத்தில் வருகிற ’பால்’ முட்டுகிறது. கூறியது கூறல் என்பதல்ல தடங்கல். வேண்டுமானால் அது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கலாம்.”தளை தட்டுதல்’’ போல ஏதோ தட்டுகிறது. பசி வெறுக்குமோ உயிர் துறக்குமோ…”என்றும் எழுதிப் பார்த்தேன்.அது எறும்பின் பாஷையாயில்லை. மொத்தத்திலும் இதில் கவிதாம்சம் குறைவு என்று பால குமாரனோ யாரோ சொன்ன நினைவு.. அதனாலும் பிரசுரிக்க மனமில்லை.
இதே போல் ’குரலகள்’என்றொரு கவிதை- நாடக மேடையில், பார்வையாளருக்குத் தெரியாமல் ஓரமாக ஒளிந்திருந்து வசனத்தை மறக்கிற பாத்திரங்களுக்கு அதை ‘எடுத்துக் கொடுக்கிற‘ப்ராம்ப்ட்டர்’ (PROMPTER)பற்றிய கவிதையொன்று. அதுவும் சுத்த ‘உரைநடையாக’ இருக்கிறது என்று ராஜுவோ பாலகுமாரனோ சொன்னார்கள்.அப்போது எங்களுக்கிடையே கடித/ கவிதைப் பரிமாற்றங்கள் நடக்கும்...அதனால் அது எங்குமே பிரசுரமாகவில்லை.
இவற்றையெல்லாம் ஏன் சொல்ல வருகிறேனென்றால். ஒரு தொகுப்பு என்று வருகிற போது சில, கவிதைகள் போல் உள்ள கவிதையாய் இல்லாதவற்றை தவிர்க்க வேண்டும். இந்தத் தொகுப்பில் ’காதல் விளையாட்டு’ என்றொரு கவிதை.அது கவிதையாக மாற மறுக்கும் ஒரு கூற்று. அதை நிர்த்தாட்சண்யமாகத் தவிர்த்திருக்கலாம். ’சூடாப்பூ’ போன்ற கவிதைகள் நிறைய எழுதப் பட்டாயிற்று.அதே போல் “கவி சாம்ராட்”.
“எவ்வளவு தூரத்தையும்”,இழைபிரிதல்” ஆகிய அற்புதமான் கவிதைகளை மறு படி மறுபடி படிக்கத் தோன்றுகிறது. அவை உங்களுக்கே அதிகம் பிடித்த கவிதையாயிருக்கும். அப்படிக் கவிதைகளைத்தான் எழுத வேண்டும்.
முகம் திரும்பா பிரிதல்கள்
என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை
எப்போதும் பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா பிரிதலகள்’
ஐம்பது வருடமாக நான் அனுபவிக்கும் துயர். இந்தத் துயர சுருதியின்( Melancholic mood) ரீங்காரத்தில்த்தான் என் ஆதிக்கவிதைகள் தங்கள் ராக விந்நியாசத்தைக் கண்டன. இது பொதுமைப்படும் போதுதான் அற்புதமான கவிதைகள் உருவாகின்றன என்கிறார்கள்.”
வண்ணதாசன் “உங்கள் முந்திய ஒரு தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல உங்கள் அயலக வாழ்வின் சோகங்கள் உங்களுக்கு ஒரு கவி மனத்தை உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் அருவியாய்க் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள், கவிதைகளையும் கவிதை சார்ந்தும்.இது ரொம்ப முக்கியமானது.
இரு தளப் பார்வைக்குப் புலப்படாத அசோக ஸ்தூபியின்,நான்காவது சிங்கமென உங்கள் முந்திய தொகுப்புகளில் நன்கு தெரியாமல் மறைந்திருந்த நான்காம் கவிச் சிங்கம் இந்தத் தொகுப்பில் துலாம்பரமாகத் தெரிகிறது.
இது உங்கள் தொடர் வாசிப்பு, மற்றும் கவிதா ஈடுபாட்டின் வெற்றி. கவிதைகளின்பால் உங்களது இந்த ஈடுபாடு மிக்க அன்பு,உங்கள் கவிதைப் பயணத்தில் உங்களை எவ்வளவு தூரமும், எவ்வளவு காலமும் அழைத்துச் செல்லும்.
இந்தப் பூமிப் பாத்திரத்தில் எந்த அவநம்பிக்கையுமின்றி தினமும் பூக்கிற ஆயிரமாயிரம் பூக்களைப் போல், நீங்கள் தொடர்ந்து கவிதைகள் தருவீர்கள். என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன்
கலாப்ரியா
இடைகால்
27 ஜூன் 2012
03 ஜூன் 2012
கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.
கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.
எதிர் விளையாட்டு
செல்வராஜ் ஜெகதீசன்
இடைவேளை நேரங்களில்
பள்ளியில் விளையாடும் ஒரு
விளையாட்டின் பெயர்
‘எதிர் விளையாட்டு’
என்றான் மகன்.
‘சிரி என்றால் அழ வேண்டும்
அழு என்றால் சிரிக்க வேண்டும்
உட்கார் என்றால் எழ வேண்டும்
எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’
அனேகமாய் எல்லா நேரங்களிலும்
அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு.
அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன்
அடியோடு அதை மறந்தே போனேன்.
அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில்
எழுதப்பட்டிருந்தது.
'பேசாதே என்றால் வகுப்பில்
பேசிக் கொண்டே இருக்கிறான்’
என்று.
o
21 ஏப்ரல் 2012
31 மார்ச் 2012
பார்வைகள் (சிறுகதை)

நிறை மாத வயிறோடு அந்த பேருந்து நிறுத்தத்தில் டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தாள் பிரேமா. அபுதாபியில் காலை வெயிலோடு நல்ல தூசுக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கடந்து போன டாக்சி ஒன்றில் பயணிகள் நிறைந்து காணப்பட்டது. ஒன்பது மணிக்கு ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும். செல்பேசியில் நேரம் பார்த்தாள். எட்டரை. வரும்போது கைகடியாரம் கட்ட மறந்து விட்டிருந்தாள். கடந்து போன ஒரு அபுதாபி அரசுப் பேருந்தும் அன்றைக்குப் பார்த்து இவள் ஏறமுடியாத அளவு கூட்டம் நிறைந்து வந்து இன்னும் அதிகம் பேரை ஏற்றியபடி போனது. பயணிகளுக்கு அரசாங்கம் செய்து கொடுத்திருக்கும் ஒரு நல்ல ஏற்பாடு இந்த பேருந்துகள். எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கும் இறங்கிக்கொள்ளலாம். கட்டணம் ஒரு திர்ஹாம். (13 ரூபாய்).
அயர்ச்சியில் சற்று தள்ளி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் உடலை முட்டுக் கொடுத்தபடி சாய்ந்து நின்றவள் தன்னில் நிலைத்திருந்த அந்த பார்வையை அப்போதுதான் பார்த்தாள். வயது நாற்பத்தைந்து இருக்கலாம். முகத்தின் முக்கால் பகுதியில் தாடி. ஏதாவது டாக்சி வருகிறதா என்று பார்ப்பதும் பின் திரும்பி இவளைப் பார்ப்பதுமாக இருந்தது அந்தப் பார்வை.
அவளுக்கு சுரேஷின் மேல் கோபம் கோபமாக வந்தது. அலுவலகத்தில் காலை எட்டு மணிக்கு தன் மேலாளருடன் மீட்டிங் என்று போகாதிருந்தால், காரில் கொண்டு போய் ஆஸ்பத்தியில் விட்டுப் போயிருப்பான். இந்த மாதிரி பார்வைகளை அவள் எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்காது. வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் அம்மா வந்து இந்நேரம் நம் கூட இருந்திருப்பாள். இந்தியாவை நோக்கி ஓடிய எண்ணங்களை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தினாள். இன்னமும் அந்தப் பார்வை இவளில் நிலைத்திருந்தது.
ஒரு பத்து நிமிட காத்திருப்பிற்குப் பின் வந்த பேருந்தில் ஏறி, ஒரு திர்ஹாம் நாணயத்தை அதற்கான பெட்டியில் இட்டவள், எதேச்சையாய் அந்த பார்வை இருந்த திசையை நோக்கினாள்.
அதுவரைக்கும் அதற்காகவே காத்திருந்த மாதிரி, அவள் சாய்ந்திருந்த காரில் நுழைந்தவன், அதை இயக்கி பார்க்கிங்கில் இருந்து பின்னால் எடுத்துக் கொண்டிருந்தான்.
o
(உயிரோசை 19 -03 -2012 மின்னிதழில் வெளியானது)
06 மார்ச் 2012
'கல்கி'யில் சிறுகதை
28 பிப்ரவரி 2012
அகத்தின் அழகு
20 பிப்ரவரி 2012
12 பிப்ரவரி 2012
கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்

ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்
நாம்.
o
02 பிப்ரவரி 2012
படித்ததில் பிடித்தது - மண்குதிரை கவிதை
நான்
கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி
தேம்பியழுகிறேன்
எனக்குச் சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி
ஆடிக் களைத்த மைதானத்தை
நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவுமில்லை.
o
(புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - காலச்சுவடு வெளியீடு)
கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி
தேம்பியழுகிறேன்
எனக்குச் சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி
ஆடிக் களைத்த மைதானத்தை
நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவுமில்லை.
o
(புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - காலச்சுவடு வெளியீடு)
11 ஜனவரி 2012
03 ஜனவரி 2012
புத்தகக் கண்காட்சியில் நான்
புத்தகங்களின் வாசனையோடு, தெரிந்த/தெரியாத முகங்களின் மத்தியில்,
அந்தத் திடலுக்குள் அலைந்து திரியும் பொழுதுகளை, வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.
2009 புத்தகக் கண்காட்சிக்கு (அலுவலக நிமித்தமான சென்னை பயணம் காரணமாக)
ஏறத்தாழ எட்டு வருடங்களுக்குப் பிறகு, வந்து போன பொழுதுகள் இன்னமும் என்னுள்.
கடல் கடந்து வாழும் ஒருவன் எதிர்கொள்ள நேரும் பேரிழப்புகளில் ஒன்றென்று இதைச் சொல்வேன்.
அகரம் மற்றும் அகநாழிகை பதிப்பக ஸ்டால்களின் வழியாக, என் கவிதைத் தொகுதிகள் மூன்று, என் இருப்பை (யாராவது ஒருவருக்கு) சொல்லும் வண்ணம், போய்ச் சேருமென்கிற திருப்தி ஒன்றே இப்போதைக்கு.
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் என் கவிதைத் தொகுதிகள் கிடைக்குமிடங்கள்:
அகரம் (அன்னம்)வெளியீடுகள்:
1) அந்தரங்கம் (பக்.112 ரூ.60/-)
2) இன்னபிறவும் (பக்.80 ரூ.60/-)
அன்னம் ஸ்டால் எண் : 88-89 / செல் : 94431 59371 (Kadhir)
அகநாழிகை பதிப்பக வெளியீடு:
3)ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (பக்.64 ரூ.50/-)
நிவேதிதா புத்தகப் பூங்கா / Nivethitha Puthaga Poonga - ஸ்டால் எண் : 326 / செல் : 99945-41010
டிஸ்கவரி புக் பேலஸ் / Discovery Book Palace - ஸ்டால் எண் : 334 / செல் : 99404-46650
O
(மீள்பதிவு)
அந்தத் திடலுக்குள் அலைந்து திரியும் பொழுதுகளை, வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.
2009 புத்தகக் கண்காட்சிக்கு (அலுவலக நிமித்தமான சென்னை பயணம் காரணமாக)
ஏறத்தாழ எட்டு வருடங்களுக்குப் பிறகு, வந்து போன பொழுதுகள் இன்னமும் என்னுள்.
கடல் கடந்து வாழும் ஒருவன் எதிர்கொள்ள நேரும் பேரிழப்புகளில் ஒன்றென்று இதைச் சொல்வேன்.
அகரம் மற்றும் அகநாழிகை பதிப்பக ஸ்டால்களின் வழியாக, என் கவிதைத் தொகுதிகள் மூன்று, என் இருப்பை (யாராவது ஒருவருக்கு) சொல்லும் வண்ணம், போய்ச் சேருமென்கிற திருப்தி ஒன்றே இப்போதைக்கு.
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் என் கவிதைத் தொகுதிகள் கிடைக்குமிடங்கள்:
அகரம் (அன்னம்)வெளியீடுகள்:
1) அந்தரங்கம் (பக்.112 ரூ.60/-)
2) இன்னபிறவும் (பக்.80 ரூ.60/-)
அன்னம் ஸ்டால் எண் : 88-89 / செல் : 94431 59371 (Kadhir)
அகநாழிகை பதிப்பக வெளியீடு:
3)ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (பக்.64 ரூ.50/-)
நிவேதிதா புத்தகப் பூங்கா / Nivethitha Puthaga Poonga - ஸ்டால் எண் : 326 / செல் : 99945-41010
டிஸ்கவரி புக் பேலஸ் / Discovery Book Palace - ஸ்டால் எண் : 334 / செல் : 99404-46650
O
(மீள்பதிவு)
19 டிசம்பர் 2011
இரண்டு கவிதைகள்
(19-12 -2011) தேதியிட்ட உயிரோசையில் வெளியானது.

இந்த நாள்
மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை.
இரண்டாவது வந்திருக்கலாம்.
ஒன்று கூட
இல்லாமல் போகுமளவுக்கு
என்னதான் செய்ததிந்த
ஒரு நாள்.
o
புகைப்படத்தில்
என்னையும் உன்னையும் அழைத்தவன்
அவனை அழைக்கவில்லை.
என்னையும் அவனையும் அழைத்த நீ
இவனை அழைக்கவில்லை.
உன்னையும் இவனையும் அழைத்த நான்
அவனை அழைக்கவில்லை.
நான் நீ அவன் இவன்
எல்லோரும் சேர்ந்திருக்கும்
இந்தப் புகைப்படத்தை
என்ன செய்வதிப்போது
என் இனிய நண்பனே.
o

இந்த நாள்
மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை.
இரண்டாவது வந்திருக்கலாம்.
ஒன்று கூட
இல்லாமல் போகுமளவுக்கு
என்னதான் செய்ததிந்த
ஒரு நாள்.
o
புகைப்படத்தில்
என்னையும் உன்னையும் அழைத்தவன்
அவனை அழைக்கவில்லை.
என்னையும் அவனையும் அழைத்த நீ
இவனை அழைக்கவில்லை.
உன்னையும் இவனையும் அழைத்த நான்
அவனை அழைக்கவில்லை.
நான் நீ அவன் இவன்
எல்லோரும் சேர்ந்திருக்கும்
இந்தப் புகைப்படத்தை
என்ன செய்வதிப்போது
என் இனிய நண்பனே.
o
17 டிசம்பர் 2011
தமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்
01.05.10
1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்தன், கலாப்பிரியா, தேவதேவன் என்று அன்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயணித்த படைப்பாளிகள் வாழ்ந்த காலம். தமிழ் சிற்றிதழ்களின் பொற்காலம். கவிஞர் சமயவேல் இக்காலத்தின் கடைக்குட்டி. 1970கள், 1980களில் முக்கிய இலக்கியத் தலங்களாக மதுரை, சென்னை, நெல்லை, கோவில்பட்டி ஆகிய இடங்கள் இருந்தன. தனது வாழ்வின் மிக இளமையான காலத்தை இந்த இடங்களில் வாழ்ந்தவர் சமயவேல். கூர்மையான இலக்கியப் பார்வையும், புதிய தர்சனங்களைக் கண்டுணர்தலும் இவரது ஆகிருதியை அப்போது உயர்த்துகிறது. காற்றின் பாடல், அகாலம், தெற்கிலிருந்து சில கவிதைகள்(தொகுப்பு) ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
தீராநதி: கடந்த மூன்று பத்தாண்டுகளின் தமிழ்ச் சூழல் இயக்கத்தில் தீவிர அரசியல், இலக்கிய விமர்சனம், கவிதை என்று பல்துறைகளில் தீவிர பங்கேற்பாளராகவும், கவனமான பார்வையாளராவும் இயங்கியுள்ளீர்கள். முதலில் கவிதையில் இருந்து தொடங்கலாம்.
சமயவேல்: எதிலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். பேட்டி என்பதே தன்னைத் தீர்த்துக்கொள்வதுதான். நம்ம self. நாம என்னவாக இருந்தோம்; இருக்கிறோம் என்பதை revisit செய்வதுதான்.
தீராநதி: இன்றைக்குக் கவிதை என்பது (தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலை மக்கள் கவிதைகள் தவிர) அதிகம் வாசிக்கப்படாத, நீர்த்துப்போன வடிவமாகச் சுருங்கிவிட் டதாகத் தெரிகிறது. நகைச்சுவை குறித்து தாவோ கூறியது போல மூளையில் சிதறும் ஒரு பொறியாகவோ, அல்லது சித்தர்களின் வாழ்க்கை மற்றும் தத்துவ விசாரப் புலம்ப ல்களாகவோ கூட கவிதை இருப்பதில்லை.
சமயவேல்: கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை. புதுக்கவிதை ஒரு பிரவாகமாக பெருக்கெடுத்து ஓய்ந்தபின்னர், மூத்த கவிஞர்கள் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதினார்கள். (உதாரணம்: தேவதேவன்) இளைஞர்கள் மூத்த கவிஞர்களை நகல் எடுத்துக் கொண் டிருந்தார்கள். தற்போதுதான் ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகளாக இளைஞர்கள் கவிதையில் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டுள்ளார்கள். பெண்ணியக் கவிஞர்களின் வருகை இதில் முதல் திருப்பம். மாலதி மைத்ரி, சுகிர்த ராணி, குட்டி ரேவதி போன்றோரின் பெண்ணியச் சொல்லாடல்கள் மூலம் தங்கள் குரலை அவர்கள் மீட்டெடுத்துள்ளனர். தலித்துகளின் குரல் தமிழ் இலக்கியத்தில் எப்போதுமே இருந்தது கிடையாது. இப்போது கவிதை மூலம் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.
தீராநதி: 1980-களின் இறுதிப்போக்கில் அல்லது 1990-களில் தேவதச்சன், சமயவேல் போன்றவர்கள் ஒருவித எளிமையுடன் கூடிய அற்புதமான அமைதி கவிந்த கவிதைகளை எழுதத்தொடங்கினர். அதன் உள்ளுலகம் விகசிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. இது இப்போது இருக்கிறதா?
சமயவேல்: நான் கூறுவதை ஆண் மையச் சிந்தனையாகக் கூட கூறலாம். Passage Into Darkness என்ற நாவல் என்று நினைக்கிறேன். அது ஐரிஷ் பெண் எழுத்தாளர் எழுதியது. பெண் உலகத்தை முழுமையாக முன்வைக்கும் வகையில் அந்தப் படைப்பின் பயணம் விகசித்துக் கொண்டே செல்கிறது. டென்னசி வில் லியம்ஸ் படைப்புகள் அளவுக்குக்கூட பெண் உலகப் பிரச்சனைகள் இங்கு பேசப்படவில்லை. அவர்கள் உடல் மொழி என்பதை மட்டும் சுற்றிவருகிறார்கள் இல்லையா? இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எழுப்பும் அருவருப்பான கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே இவர்கள் நேரம் சரியாகிவிடுகிறது. இவர்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளனர். அவர்கள் நாவல் உலகுக்குள் செல்கிறபோது நீங்கள் சொல்கிற விகசிப்பு சாத்தியப்படுகிற வாய்ப்புகள் உள்ளன. அப்புறம், ஆண்கள் ம ட்டுமல்ல மொத்த சமூகமே அப்படித்தான் உள்ளது.
தீராநதி: நீங்கள் கூறுகிற பெண்ணிய, தலித்தியக் குரல்களைத் தாண்டி முழுமையான கவிதைகள் என்று என்ன வந்துகொண்டிருக்கின்றன?
சமயவேல்: யவனிகா ஸ்ரீராம் அரசியல் பிரக்ஞை உள்ள கவிஞராக இருக்கிறார். ராணி திலக் வாழ்க்கை உள்ளீடுகள், சாயல்களை உள்வாங்கி எழுதுகிறார். ஸ்ரீநேசன் வாழ்வின் பல்வேறு வண்ணங்களைக் கண்டடைந்து எழுதுகிறார். அய்யப்ப மாதவன், ஸ்ரீசங்கர் போன்றவர்களிடம் புதிய மொழி உள்ளது. லீனா மணிமேகலை பெண் ணியம், உடல்மொழி தவிர பாலியல் சுதந்தரம் பற்றி எழுதுகிறார். தற்போதைய தமிழ்க்கவிதைகளை possitiveஆகவே பார்க்கிறேன். புதிய இளைஞர்கள் பழைய பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, விடுதலையாகி, புதிய கவிதா மொழியைக் கண்டடைந்துள்ளனர்.
தீராநதி: இதில் மரபான தமிழ்க்கவிதையில் இருந்து எடுத்துக்கொள்வது எப்படி இருக்கிறது?
சமயவேல்: 2000 வருடத் தமிழ்க்கவிதை மரபில் தற்காலக் கவிதை எங்கே நிற்கிறது என்று விக்கிரமாதித்தன் கேட்கிறார். அதுபோலவா?
தீராநதி: நான் கேட்க விரும்புவது சங்கம் முதல் பாரதி வரை தொடர்ந்த தமிழ்க் கவிதை கன்னி விடாமல் தொடர்கிறதா? தமிழ் வாழ்க்கை சங்கக் கவிதைகளில் உள்ளது. சங்கக் கவிதைகளை வாசிப்பதுகூட இன்று சில கவிஞர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. அது தேவையில்லை என்கிறார்கள். உலகக்கவிதை வாசிப்புமட்டும் போதாதா என்கிறார்கள். நான் மலினப்படுத்தப்பட்ட சந்தம், யாப்புகளைக் கூறவில்லை. 1970, 1980-களின் முக்கியக் கவிதைகள் என்பது மேற்கத்தியத் தத்துவங்களின் நகல்களாகத் தானே இருந்தது? மில்ட்டன், ராபர்ட் ஃபுரோஸ்ட், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன் என்று யாரையாவது பின்பற்றித்தான் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தோம். இ ன்று அதுபோல உலகக் கவிஞர்கள் இல்லாததுதான் தேக்கத்துக்குக் காரணமா?
சமயவேல்: 1970-களில் ஏற்பட்ட நெருக்கடியே இதுதான். கவிதையில் எந்த அளவு தத்துவம் இருக்கலாம்; இருக்கக்கூடாது என்ற விவாதம் எழுந்தது. தேவதச்சன், ஆனந்த் போன்றோர் அப்போது தத்துவத்தை நேரடியாக எழுதிக்கொண்டிருந்தார்கள். தற்போது தேவதச்சனின் குருவி கவிதைகள் எளிமையையும், அமைதியையும் கொண்டுள்ளன. அற்புதமானவை அவை. இருந்தாலும் கவிதைக்கும் தத்துவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வாழ்க்கையின் நித்தியமான உண்மைகளைக் கவிதைகள்தாம் சிறப்பாகக் கவனத்தில் கொள்கின்றன. வாழ்க்கையில் உள்ள புரியாத பகுதிகளைக் கொள்வதைத்தான் கவிதையும், தத்துவமும் செய்கின்றன. தற்போதும் அரசியல் கவிதைகளை எழுதித்தான் தீரவேண்டும். யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் அதைத் தொடங்கியுள்ளனர்.
தீராநதி: தற்போது உலகக்கவிதை என்னவாக இருக்கிறது?
சமயவேல்: தாவோ, ஜென் பாதிப்பில் சிலர் எழுதுகிறார்கள். உலகக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடிய யாரும் இன்று இல்லை. துணை உலகக்கவிஞர்கள்தான் உள்ளனர்.
தீராநதி: இதற்கு, மேற்கத்திய தத்துவங்கள் தோல்வியடைந்து வருவதும் ஒரு காரணமா? தற்போது உலகளாவிய தத்துவ உள்ளொளி என்று ஒன்று இல்லை அல்லவா?
சமயவேல்: தற்போது எல்லாம் பொட்டலம் கட்டும் தன்மையாகிவிட்டது. உள்ளீடற்ற, சாராம்சமில்லாத கூடாக உலகம் ஆகிவிட்டது. ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத் தையும் பயன்படுத்தித் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறோம். இதனால் அரசியல், தத்துவம், இசை எல்லாம் பயனற்றதாகி விட்டது. அப்புறம் செவ்வியல் காலம் முடிந்து வி ட்டது. பின் நவீனத்துவத்தில் எல்லாம் தகர்க்கப்பட்டுள்ளது. கட்டுடைப்பு எங்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குமுன் உடைக்க முடியாத நுண் அலகுகள் எல்லாம் உடைந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து புதிய மரபுகள் தோன்றும். தற்போது உலகம் முழுவதுமே ஒரு திரவ நிலை நிலவுகிறது. தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதிலிருந்து solid ஆன ஒன்று உருவாகும்.
தீராநதி: ஆனால், இன்று தலித்தியம், பெண்ணியம் போன்ற அடையாள அரசியல் காலத்தில் இன்னும் ஓராயிரம் நல்ல கவிதைகள் முகிழ்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்ப துபோல் தோன்றுகிறதே? அப்புறம், பல ஆண்டுகள் முன் பிரமிள் புதிய கவிதை இயக்கத்தைத் தொடங்கினார். இன்று அது தொடரவில்லை. புதிய கவிஞர்கள் பிரமிளை எவ்வாறு வாசிக்கிறார்கள்?
சமயவேல்: இன்று நிறையபேர் அவரைக் கொண்டாடுகிறார்கள். தத்துவத்தையும், அறிவியலையும் அழகியல் பூர்வமாகக் கவிதையில் இணைக்கும் முயற்சியில் பிரமிள் ஈடு பட்டார். அவர் அதி கவி. மிக முக்கியமான அறிவியக்கத்தின் சுடர் தோன்றி மறைந்துவிட்டது. உலகக் கலாசாரங்களின் ஒருமித்த குரலாகக் கவிதையை மாற்றமுடியுமா என்று முயற்சித்தார். எகிப்து, ரோமானியக் கலாசாரங்களில் இருந்து தனது அழகியலை எடுத்துக்கொண்டார். அவரது ஓவியங்களில் இதை வெளிப்படையாக அவதானிக்கலாம். அவரது கவிதைகளிலும் இது உள்ளது. தமிழ்க்கவிதை மரபுக்கு இது புதுசு. ஆனால், தமிழின் குழுவாதம் அதை வீழ்த்திவிட்டது. அவரது தீவிர கவிதை இயக்கத்தை அது திசை திருப்பிவிட்டது. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தை விரயம் செய்துவிட்டார். எதிர்
விமர்சனங்களால் தனிமைப்படுத்தப்பட்டார்.
தீராநதி: இன்று அனைத்து கருத்தாக்கங்களுக்கும் அதிகார மையங்கள் உருவாகி விட்டன. தற்போது அப்படி ஒரு ஆளுமை தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா?
சமயவேல்: பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன. அரசியல் மட்டுமல்ல. அகடமிக் சைடிலும் அதிகார மையங்கள் உருவாகியுள்ளன.
தீராநதி: இன்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமைகள் இல்லையே. Nomfiction எழுதுபவர்கள்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமையாக உள்ளனர். படைப்பாளிகளில் இத்தகைய ஆளுமைகள் இல்லையே?
சமயவேல்: எனக்கு அப்படியும் தோன்றல. ஏன்னா, அதையும் யாரும் வாசிப்பதில்லை. அ. மார்க்ஸ். எஸ்.வி.ஆர் போன்றவர்களுக்கு பொது வாசகர்கள் இல்லையே. வே ண்டுமானால் ரசிக மனோநிலை இருக்கலாம். இதனால் குட்டி, குட்டி அதிகார மையங்கள் உருவாகி வருகின்றன. இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உட்காரும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதைத்தான் தற்போதைய பலவீனமான நிலை என்று சொல்கிறேன். ஆனால். 1970-களில் இத்தகைய நிலை இல்லை. அப்போது முழு மையான ஆளுமைகள் இருந்தன. அது வசந்தகாலம் என்றே நினைக்கிறேன். அன்றைய படைப்பு ஆளுமைகளில் ஒரு ஒன்றிப்பு நிலவியது. அது சிறு பத்திரிகைகளின் காலம். அங்கு பரந்தாமன் போன்றவர்கள் சிற்றிதழ்களுக்காக உயிரைக் கொடுத்தார்கள். இடதுசாரி அரசியல் வீச்சு ஒரு பக்கமும், அதற்கு நிகரான தீவிர அழகியல் வீச்சும் நிலவியது. இரண்டுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியது. அந்த 1970-களின் காலம் திரும்ப வராதா என்ற ஏக்கம் இருப்பதாக கல்யாணிஜிகூட அண் மையில் எழுதியிருந்தார்.
தீராநதி: நீங்கள் 1970-கள் காலத்தைச் சேர்ந்தவர் இல்லையா? அதன் நினைவுகள் ...
சமயவேல்: நான் அக்காலத்தின் கடைக்குட்டி. அப்போது பரஸ்பர புரிதல் நிலவியது. சுந்தர ராமசாமி, நகுலன் சண்டைகள்கூட மிகப் பூடகமாக நடந்தது. முருகேச பாண் டியன், நான் போன்றவர்கள் நாகர்கோயில் போய் சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு, திருவனந்தபுரம் போய் நகுலனையும் பார்த்து வருவோம். எங்களுக்கு எந்த நெ ருக்கடியும் அப்போது இருந்தது இல்லை. இப்போது அப்படி நினைத்துப் பார்க்கமுடியுமா? நீல பதமநாபன், வண்ணநிலவன், கி. ராஜநாராயணன் போன்றவர்கள் பிரியமானவர்களாக இருந்தார்கள். அன்பு என்பது அப்போதைய முக்கியமான விழுமியமாக இருந்தது. அந்த பெருங்கலாசாரத்தில் இல்லாத அன்பு. அதற்கான நிரந்தர ஏக்கம் அப்போது அனைவரது மனசிலும் நிறைந்திருந்தது. அது பேரன்பு. அதை வேறு எப்படியும் சொல்லமுடியாததாக இருந்தது. அதைத்தான் அப்போது அனைத்து படைப்பாளிகளும் கொண்டுவர முயற்சி செய்தனர். இதற்காகத்தான் இதில் வெற்றி பெற்ற வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றோர் பின்னர் கிண்டல் செய்யப்பட்டனர். எனது சிறிய கவனிப்பு என்னவென்றால் வண்ணநிலவன், வண்ணதாசன் கதைமொழியை இன்றுவரை யாராலும் தாண்ட இயலவில்லை. அவர்களை எப்போதுமே நிராகரி த்துவிடமுடியாது, மிகப்பெரிய படைப்பான ஆழி சூழ் உலகுகூட வண்ணநிலவன் கதைமொழியைக் கடக்க முடியவில்லை. இன்று சரியான விமர்சனம் இல்லாததுதான் இதற்குக் காரணம். இதனால் சரியான படைப்புகளை அடையாளம் காட்ட யாரும் இல்லை. 1970-களைச் சேர்ந்தவர்களில் யாரும் யாரையும் நிராகரிக்காத தன்மை இருந் தது. ‘அவரும் 10 நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறாரய்யா’ என்ற கருத்து ஒவ்வொரு படைப்பாளிமீதும் இருந்தது. கருத்து வேறுபாடுகளைச் சேர்த்து அங்கீகரித்தனர். நானும் வண்ணநிலவனும் மிக நெருக்கமாகப் பழகினோம். ஒருவர் படைப்புகளை ஒருவர் என பரஸ்பரம் புகழ்ந்து கொண்டது கிடையாது. வண்ணதாசனும், கலாப்பிரியாவும் தங்களுக்குள் பரஸ்பரம் சொரிந்து கொண்டது இல்லை. துதிபாட மாட்டார்கள். படைப்புகள் பொதுவெளியில் இருந்தன. நாங்கள் படைப்புகளைப் பொது வெளியில் பார்த்தோம்.
தீராநதி: 1970-களின் கலையின் மையம் அன்பு என்று கூறுகிறீர்கள். தற்போது அப்படி ஒரு focus இருக்கிறதா?
சமயவேல்: தற்போது சூன்யம்தான் நிலவுகிறது. ஏதாவது குப்பையாகவாவது கரை ஒதுங்கவேண்டுமே? அப்படி ஒண்ணையும் காணோம். அன்பு என்பது நிலப்பிரபுத்வக் கூறாக இருந்தது. இன்று அத்தகைய சர்வதேச கூறு இல்லை. ஆனால், அரசியல் அப்படியேதான் இருக்கிறது. நான் கட்சி அரசியலைக் கூறவில்லை.
1. நுகர்வுக் கலாசாரம்
2. ஊடகத்தின் அசுர வளர்ச்சி
3. பண்பாட்டு இயக்கங்கள் இல்லாதது
4. தகவல் தொழிநுட்பம்
ஆகிய 4 புதிய கூறுகள் சூன்யத்தை உருவாக்கிவிட்டன. மீண்டும் 70-களின் காலத்துக்கே திரும்பலாம். அன்றைய செவ்வியல் இயக்கம் நியாயமானது. இன்று அதற்கான வாழ்க்கைத் தொடர்ச்சி இல்லை. பெரும் ஆளுமைகள், படைப்புகள் வெளிவருவதற்கான வாழ்க்கை இல்லை. வாழ்க்கை சிதறுண்டு கிடக்கிறது. முகம் இழந்து, விளிம்பு நிலையையும் தாண்டிய கேவலமான ஸ்திதி நிலவுகிறது. இந்த வாழ்க்கை வாழ்வதற்கும், எழுதுவதற்கும் உகந்ததாக இல்லை. கவிதை எப்போதும் வாழ்க்கையின் உள்பகுதி பற்றி ஆத்மார்த்தமாக எழுதுகிற அழகியலைக் கொண்டது. அது 1970-களுக்குப்பின் காணாமல் போய்விட்டது. 1990-கள் வரைகூட இது இருந்தது.
இன்று எல்லா இயக்கங்களும் சோரம் போய்விட்டன. இன்று தீவிரமான, மிதமான இயக்கம் எது என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று 4 இயக்கங்கள் வருகின்றன. தலித் இயக்கம் என்கிறார்கள். எல்லாம் சில்லுண்டியாக இருக்கிறது. குறிப்பிட்டு எதையும் சொல்லமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் இது பொருத்தமாக இ ருக்கிறது. இச்சூழலில் பெரும் படைப்பை எதிர்பார்க்க முடியாது. எல்லாரும் ஒவ்வொரு நாளும் சோரம் போகிறோம். 1947 இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது. அதுதான் சிறந்தது என்று ஆழ்மனதில் பதிந்துவிட்டது. இன்று யாருமே தமது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை. பழைய வாழ்க்கையில் இத்தகைய தியாகிகள் இருந்தனர். ஆனால், ஒரு வீட்டுக்குள் வாழ்பவர்கள் மத்தியில் கூட இன்று விட்டுக்கொடுத்தல் இல்லை. அப்படியிருக்கும் போது பொதுச் சொல்லாடல்கள் மூலம் எல்லாப் பிரிவுகளையும் ஊடறுத்துப்போவது சாத்தியமில்லை. ஊடகத்தின் பெருவளர்ச்சி மொத்த நேரங்களையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. எப்போதும் ஏதோ ஒரு சேனல் நமது ஏதாவது ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு விடுகிறது. நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து மொத்த சமூகமும் sணீபீவீst சமூகமாகிவிட்டோம் இல்லையா?. இல்லையென்றால் வடிவேலு அடி வாங்குவதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? இதனால்தான் மு ழுமையான ஆளுமைகளைவிட சிதறுண்ட சிறு ஆளுமைகள்தான் சாத்தியம் என்கிறேன். அதற்கு அடையாளமாக அவர்களின் புது மொழி உள்ளது. இது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தீராநதி: இந்தப் புது மொழி என்பது சில பெண்ணியக்கவிஞர்கள் தவிர வேறு யாரிடம் நம்பிக்கை ஏற்படுத்துகிறது? மொத்தச் சூழலுமே மிகச்சிறிய வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகால சமூக வாழ்க்கை பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தாலும் சாதிய அடையாளம் சார்ந்த விழுமியங்கள்தான் (நான் இங்கு தலித் சாதிகளைக்கூறவில்லை) இன்று படைப்பாளிகளிடம் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.
சமயவேல்: தமிழ் வாழ்க்கையின் நுண் அலகுகள் சாதியால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் துவம்சம் செய்யவேண்டும். அத்தகைய நினைப்புகளும் இருக்கிறது. ஆனால், குடும்பம் என்ற கேவலமான யூனிட்டைப் புனிதமாக பேணிக்காக்கிறோம். இத்தகைய நுண் அலகுகளையும் அடித்து நொறுக்கவேண்டும். இதை இலக்கியம்தான் செய்யமுடியும். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலில் சோரம் போகும் அம்மாவை இயல்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எத்தகைய பெண்ணையும் புரியும் மனநிலையை நான் பெறுகிறேன். இத்தகைய soft எழுத்துகள் வரவேண்டும்.
தீராநதி: ஆண் எழுத்தாளர்கள் பெண்ணிய எழுத்துகளையும், பிற சாதிகளில் பிறந்த எழுத்தாளர்கள் தங்கள் சாதிகளைத் துறந்து தலித் எழுத்துகளையும் தோளில் சுமந் தால்தான் இது சாத்தியம். எழுத்தில் இத்தகைய intersections எப்போது சாத்தியம்?
சமயவேல்: அப்படியான காலம் நெருங்கிக் கொண்டுதான் உள்ளது. பெண்ணிய எழுத்தாளர்கள் மொத்த வாழ்க்கையைப் பதிவு செய்யத்தொடங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
தீராநதி: உரையாடலை இப்படி மாற்றலாம். ஒரு ஆண் தனது பாவத்துக்கு விமோசனம் தேடுவது போல தனது ‘புத்துயிர்ப்பு’ நாவலை டால்ஸ்டாய் ஆரம்பிக்கிறார். பாவவிமோசனம் தேடும் பயணம் 800 பக்கங்களுக்கு விகசிக்கிறது. இப்படி ஒரு தேடல், பயணம் தமிழில் இல்லாமல் போனது ஏன்?
சமயவேல்: அது இல்லாததால்தானே தமிழில் படைப்புகள் மொக்கையாக இருக்கின்றன. மொக்கை என்ற புதிய சொல்லையே தமிழ் நாவல்கள் உருவாக்கிவிட்டன. மொக்கை என்ற சொல் useless என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சரி, சமுதாயம் மொக்கையாக இருந்தால் அதைத்தானே எழுதுவார்கள். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அதைத்தான் எழுதுகிறார்கள். ஆனால் இது மிகப் பெரிய வாசக வன்முறை. 1000, 2000 பக்கங்கள் எழுதுகிறார்கள். அதை முழுதாகப் படித்து என்னதான் ஆகப்போகிறது. பிறகு, ஏன் வரலாற்று நாவல்களை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் வரலாறு எனக்குச் சுமையாகத்தான் இருக்கிறது.இது மலத்தில் அரிசி தேடும் முயற்சிதான். நவீன வாழ்க்கை பெரும் படைப்புகளைத் தருவதற்கானதாக இல்லை. உலக அளவிலும் வரலாற்று நாவல்கள்தான் எழுதுகிறார்கள். இதை மீறுவதற்கு பெரும் வீரியம் வேண்டும். நாம் நமது பால்ய காலத்தில் வாசித்த பொன்னியின் செல்வன் ஒரு ரொமாண்டிசம். அப்போது வரலாற்று நாவலே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். அரசு ஆவணக்காப்பகங்களில் கெசட்டியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கிறார்கள், மியூசியங்களில் எலும்புக்கூடுகளைத் தேடுவதைப்போல. பின் எலும்புக்கூடுகளுக்கு மேல்பூச்சு பூசி வரலாற்று நாவல்களாக உலவவிடுகிறார்கள். creativity கூடக்கூடப் பக்கம் குறையும். படைப்பூக்கத்தின் வறுமைதான் பக்கங்கள் அதிகரிப்பதன் காரணம். இன்றைய இளைஞர்கள் இந்த மொக்கைகளை வாசிக்கப்போவதில்லை. இப்போது you tube காலம். அவர்கள் கைகளில் அனைத்துத் தகவல்களும் உள்ளன. அவர்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதுதான் இன்றைய படைப்பின் சவால். இன்றைய நவீன வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதினால் போதும் நவீன சிக்கல்கள் அனைத்தையும் கொண்டுவந்துவிடமுடியும்.
தீராநதி: 60 நொடி விளம்பரப்படத்தில் மனிதனின் பரிணாம வளர்ச்சி மலினப்படுத்தப்பட்ட வடிவில் காண்பிக்கப்படுகிறது. தகவல்கள் என்பது ஊடகச் சாயம் பூசப்பட்டு கு ழந்தைகளைச் சென்றடைந்து கொண்டே இருக்கின்றன. இன்று பூமியில் ஒரு பெரும் நிகழ்வு நிகழ்ந்தால் அடுத்த 5 நிமிடங்களில் அதன் பூர்வ காலத் தகவல்கள் முதல் அனைத்தையும் பெற்றுவிடமுடிகிறது. இவ்வாறு ஊடகங்கள் வளர்ந்துள்ள நிலையில் எழுத்தில் விவரணைகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இணையம் வந்த பிறகு வாசிப்பு scaning ஆகிவிட்டது. இதுதான் புதிய எழுத்தின் சவால் என்று நினைக்கிறேன்.
சமயவேல்: அவ்வாறு ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆயிரம் பக்கத்தில் மொக்கை நாவல் எழுதுகிறார்கள் போல. டூமாஸ் கேலி செய்த வரலாற்றைத்தான் அவர் காலத்துக்கும் பின்னர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு தீவிரமாக மறுக்கிறேன் என்றால், வரலாறு என்பது எப்போதும் சார்பு நிலை கொண்டது. ஆளும் வர்க்கம் சார்ந்ததாகவே வரலாறு உள்ளது. புனைவுதான் இதைவிட மிகவும் சிறந்தது. சிலப்பதிகாரம் போன்ற பெருங்கதையாடல்கள் தன்னளவில் மிக வும் அற்புதமாக உள்ளது. அது மிகச் சிறந்த புனைவு. பிறகு இவர்கள் அதை ஏன் மீண்டும், மீண்டும் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. அகலிகையை கு.ப.ராவும், பு.பி.யும் எழுதினார்கள். அது அசலான கதைகள். அதில் ஒரு விஷயம் உள்ளது. அது வரலாற்றுப் புனைவு என்றும் சொல்லமுடியாது. அதில் வேறு ஒரு கேள்வி உள் ளது. ‘கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே..’ என்று பு.பி. பொன்னகரத்தில் எழுதியதை மீறி, சொல்ல என்ன இருக்கிறது.
தீராநதி: வரலாற்றுப் புதினம் என்பது recreation என்கிறார்கள். அப்படியானால் வால்மீகி ராமாயணம் குறித்த அக்காலத்திய சரியான விமர்சனம்தான் கம்பராமாயணம். அதனால்தான் ஜீவா போன்ற நாத்திகர்கள் அதற்குள் travel செய்ய முடிந்தது. அதுபோன்ற travel ஆக இன்றைய வரலாற்றுப் புதினங்கள் இருக்கிறதா?
சமயவேல்: நிச்சயமாக இல்லை. பொதுவாகவே 90-க்குப் பிந்தைய மொத்த இலக்கியப் போக்கில் திருப்தி இல்லை. நிறைய நல்ல படைப்புகள் இல்லை. மிகக் கொஞ்சமாக த்தான் உள்ளது. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. 1970-களில் தொட்ட உச்சத்தை யாருமே தொடவில்லை. அவர்களுக்கு இருந்த பார்வை தர்சனம் இவர்களுக்கு இ ல்லை. எப்படியாவது நிறையபேர் வாசிக்கிற பண்டமாக மாற்ற வேண்டுமே என்ற மலினமான, வெகுஜனப் பத்திரிகைத் தன்மைதான் தெரிகிறது. இதையும், தனது சொந்த இருப்பு குறித்த சண்டைகள் மற்றும் தந்திரங்களைக் கைவிட்டால்தான் அதைக் கண்டடைய முடியும்.
தீராநதி: கட்டமைக்கப்பட்ட புனிதமாகவே வரலாறு உள்ளது. வரலாற்று அபத்தங்கள் என்ன என்றே நமக்குத் தெரியாது. வரலாற்றில் நடந்த அபத்தங்கள் தெரியாமல் வரலாற்றை எப்படி படைப்பாக்க முடியும்?
சமயவேல்: தமிழில் வரலாறு குறித்த புனைவில் ஈடுபடுபவர்களுக்கு அது தெரியாது. பொதுவாக, உள்ளீடற்ற சமூகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப எதிர்பார்க்கப்படும் படைப்புகளும் உள்ளீடற்றதாகவே உள்ளன. இதை எதிர்க்க பெரும் வீரியம் வேண்டும். அவ்வாறு சமீபத்தில் வெளிவந்துள்ள ஆளுமைகளாக அ. முத்துலிங்கம், கோணங்கி, முருகபூபதி, ஹரிகிருஷ்ணன்(மணல்மகுடி), ஆதவன் தீட்சண்யா, திருச்செந்தாழை ஆகியோர் புதிய மொழியையும், புதிய உள்ளடக்கத்தையும் உருவாக்குகிற க ட்டாயத்தில் இருப்பவர்கள். கவிதை பற்றி ஏற்கெனவே கூறிவிட்டேன்.
தீராநதி: கோணங்கி மொழி குறித்த சர்ச்சை உள்ளதே?
சமயவேல்: ஆமாம். அவர் எங்களுக்காக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் communicativeஆக எழுத வேண்டும். அப்போது அவர் மொழி புதியதாக இருக்கும்.
தீராநதி: 1970-களில் இருந்து தமிழில் முக்கிய இலக்கியச் சூழலாகக் கருதப்பட்ட மதுரை, நெல்லை, சென்னை, கோவில்பட்டி ஆகியவற்றில் தொடர்ச்சியாக 1980-களின் இறுதிவரை வாழ்ந்துள்ளீர்கள். அச்சூழல்கள் உங்களிடம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின?
சமயவேல்: நான் பிறந்தது கரிசல் பூமி. விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர். நான் வளர்ந்தது பெரும்பாலும் எனது அம்மா முனியம்மா பிறந்த வேம்பாரப்பட்டி. என் அம்மாவின் அப்பா சிறந்த சேவற்சண்டைக்காரர். சேவற்கட்டுக்காரர் என்று சொல்வார்கள். இருபது சேவல்களை ஜெயித்து தோலில் போட்டு வருவதை நான் பார்த்தி ருக்கிறேன். தினசரி கோழிக்கறிதான். பிள்ளைப்புதூர் பள்ளியில் படித்தேன். லீவு நாட்களில் வேம்பாரப்பட்டி தாத்தா வீடும், தோட்டமும் தான். தாத்தாவுடன் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்போம். அதனாலே பின்னாட்களில் எனக்கு தக்கையின் மீது நான்கு கண்கள் எனக்குப் பிடித்த கதையானது. அந்தத் தோட்டத்தில் தான் என் பால்ய சகியைச் சந்தித்தேன். திடீரென என் அம்மாவின் சாவு என்னை மிகவும் பாதித்தது. வேம்பாரப்பட்டியில் இருந்து பிரித்துவிட்டது. பள்ளியில் தையல் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். பிளாட்டோ, சாக்ரடீஸ் புத்தகங்களைக் கொடுத்தார். சாமிநாதசர்மா எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் பள்ளியில் படிக்கும்போதே வாசித்துவிட்டேன். எனக்கு சி.பி.எம் கட்சிக்காரர்கள் அறிமுகம் கிடைத்தது. எப்படியும் புரட்சிக்காரன் ஆகவேண்டும் என்று நினைத்தேன். எங்கள் ஊருக்கு அருகில் பந்தல்குடி என்ற ஊர் உண்டு. அங்குதான் அரசு நூலகம் இருந்தது. அங்கு சென்று புத்தகங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு வந்தேன். எங்கள் ஊருக்குவரும் போஸ்ட்மேனிடம் தினசரி ரெண்டு புத்தகங்களின் பெயர்களை எழுதிக்கொடுத்து பந்தல்குடி நூலகத்தில் இருந்து வாங்கிவருவார். அதை அன்றே வாசித்து விடுவேன். கம்மாய்க்கரை மரத்தடி, கமலைக்கல், பேய் நடமாடும் ஊர்க்கோடிக் கோயில், மறுநாள் அதைக்கொடுத்து விட்டு வேறு இரண்டு புத்தகங்களை வாங்கிவருவார்.
மதுரையில் கல்லூரிப் படிப்பு. முருகேசபாண்டியன் அதே கல்லூரியில் படித்தார். ஐ.சி. பாலசுந்தரம் என்ற அருமையான ஆசிரியர் கிடைத்தார். அவர்தான் எங்கள் ரசனைகளை வளர்த்தவர். காமு, காப்காவை அறிமுகப்படுத்தினார். நல்ல சினிமா என்றால் என்ன என்பதை உணர்த்தினார். அவர் அபி, மீரா, அப்துல்ரஹ்மான் ஆகியோரின் கல்லூரித்தோழர். அவர் மூலம் மதுரை இலக்கியத் தோழமை வட்டத்தின் பரிச்சயம் கிடைத்தது.
ஜி. நாகராஜன் தங்கியிருந்த சந்தானம் லாட்ஜுக்குச் செ ல்வேன். நான் சின்னப்பையன். விரட்டிவிடுவார். இடையில் கல்லூரிப்படிப்பு தடைப்பட்டது. மீண்டும் பாளையங்கோட்டையில் தொடர்ந்தது. அங்குதான் ஜோதிவிநாயகம் எ ன்ற என் அருமையான நண்பனைச் சந்தித்தேன். அவர் லெண்டிங் லைப்ரரி நடத்தினார். ரெண்டு பேரும் வீடுவீடாக புத்தகம் போடுவோம். பிறகு விடிய விடிய பேச்சு. நம்பிராஜன்(விக்கிரமாதித்தன்), வண்ணநிலவன், கலாப்பிரியா, கி.ரா, வண்ணதாசன் ஆகிய நண்பர்கள். நாகர்கோயில் சென்று சுந்தரராமசாமி, திருவனந்தபுரம் சென்று நகுலன் என்று 1970-களின் ஜாம்பவான்களோடு நட்பு வட்டம் விரிந்தது.
1976 இல் சென்னை வந்தேன். சென்னையின் முக்கிய காலகட்டம் அது. அங்குதான் தீவிர அரசியல் பரிச்சயம் கிடைத்தது. ராஜதுரை சோறும் போட்டு, சொல்லியும் கொடுத்தார். வண்ணநிலவன் துக்ளக்கில் சேர்ந்தார். பாதிநாள் அவரது வீடு. சந்திரா அன்பை மறக்கமுடியாது. இவர்கள்தான் என் parents. பிரமிள் பழக்கம் ஏற்பட்டது. எங்கு சென்றாலும் அவருடன் சுற்றுவேன். நவீன நாடகம், நல்ல சினிமாக்கள், இசை என்று மிக முக்கியமான கலைகளின் வசீகரத்தினை அப்போதுதான் உணர்ந்தேன். தீவிர அரசியலில் இருந்தேன். அரசு ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது. தாங்கமுடியவில்லை. இதனால் அரசு வேலையில் சேர முயற்சி செய்தேன். 1981இல் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் மாற்றல் வாங்கிக்கொண்டு கோவில்பட்டி வந்தேன். கோயில்பட்டியில் தீவிர காலத்தில் அவர்களோடு நானும் சுவாசித்தேன்.
1947இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது.
காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை!
பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன.
o
1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்தன், கலாப்பிரியா, தேவதேவன் என்று அன்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயணித்த படைப்பாளிகள் வாழ்ந்த காலம். தமிழ் சிற்றிதழ்களின் பொற்காலம். கவிஞர் சமயவேல் இக்காலத்தின் கடைக்குட்டி. 1970கள், 1980களில் முக்கிய இலக்கியத் தலங்களாக மதுரை, சென்னை, நெல்லை, கோவில்பட்டி ஆகிய இடங்கள் இருந்தன. தனது வாழ்வின் மிக இளமையான காலத்தை இந்த இடங்களில் வாழ்ந்தவர் சமயவேல். கூர்மையான இலக்கியப் பார்வையும், புதிய தர்சனங்களைக் கண்டுணர்தலும் இவரது ஆகிருதியை அப்போது உயர்த்துகிறது. காற்றின் பாடல், அகாலம், தெற்கிலிருந்து சில கவிதைகள்(தொகுப்பு) ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
தீராநதி: கடந்த மூன்று பத்தாண்டுகளின் தமிழ்ச் சூழல் இயக்கத்தில் தீவிர அரசியல், இலக்கிய விமர்சனம், கவிதை என்று பல்துறைகளில் தீவிர பங்கேற்பாளராகவும், கவனமான பார்வையாளராவும் இயங்கியுள்ளீர்கள். முதலில் கவிதையில் இருந்து தொடங்கலாம்.
சமயவேல்: எதிலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். பேட்டி என்பதே தன்னைத் தீர்த்துக்கொள்வதுதான். நம்ம self. நாம என்னவாக இருந்தோம்; இருக்கிறோம் என்பதை revisit செய்வதுதான்.
தீராநதி: இன்றைக்குக் கவிதை என்பது (தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலை மக்கள் கவிதைகள் தவிர) அதிகம் வாசிக்கப்படாத, நீர்த்துப்போன வடிவமாகச் சுருங்கிவிட் டதாகத் தெரிகிறது. நகைச்சுவை குறித்து தாவோ கூறியது போல மூளையில் சிதறும் ஒரு பொறியாகவோ, அல்லது சித்தர்களின் வாழ்க்கை மற்றும் தத்துவ விசாரப் புலம்ப ல்களாகவோ கூட கவிதை இருப்பதில்லை.
சமயவேல்: கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை. புதுக்கவிதை ஒரு பிரவாகமாக பெருக்கெடுத்து ஓய்ந்தபின்னர், மூத்த கவிஞர்கள் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதினார்கள். (உதாரணம்: தேவதேவன்) இளைஞர்கள் மூத்த கவிஞர்களை நகல் எடுத்துக் கொண் டிருந்தார்கள். தற்போதுதான் ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகளாக இளைஞர்கள் கவிதையில் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டுள்ளார்கள். பெண்ணியக் கவிஞர்களின் வருகை இதில் முதல் திருப்பம். மாலதி மைத்ரி, சுகிர்த ராணி, குட்டி ரேவதி போன்றோரின் பெண்ணியச் சொல்லாடல்கள் மூலம் தங்கள் குரலை அவர்கள் மீட்டெடுத்துள்ளனர். தலித்துகளின் குரல் தமிழ் இலக்கியத்தில் எப்போதுமே இருந்தது கிடையாது. இப்போது கவிதை மூலம் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.
தீராநதி: 1980-களின் இறுதிப்போக்கில் அல்லது 1990-களில் தேவதச்சன், சமயவேல் போன்றவர்கள் ஒருவித எளிமையுடன் கூடிய அற்புதமான அமைதி கவிந்த கவிதைகளை எழுதத்தொடங்கினர். அதன் உள்ளுலகம் விகசிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. இது இப்போது இருக்கிறதா?
சமயவேல்: நான் கூறுவதை ஆண் மையச் சிந்தனையாகக் கூட கூறலாம். Passage Into Darkness என்ற நாவல் என்று நினைக்கிறேன். அது ஐரிஷ் பெண் எழுத்தாளர் எழுதியது. பெண் உலகத்தை முழுமையாக முன்வைக்கும் வகையில் அந்தப் படைப்பின் பயணம் விகசித்துக் கொண்டே செல்கிறது. டென்னசி வில் லியம்ஸ் படைப்புகள் அளவுக்குக்கூட பெண் உலகப் பிரச்சனைகள் இங்கு பேசப்படவில்லை. அவர்கள் உடல் மொழி என்பதை மட்டும் சுற்றிவருகிறார்கள் இல்லையா? இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எழுப்பும் அருவருப்பான கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே இவர்கள் நேரம் சரியாகிவிடுகிறது. இவர்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளனர். அவர்கள் நாவல் உலகுக்குள் செல்கிறபோது நீங்கள் சொல்கிற விகசிப்பு சாத்தியப்படுகிற வாய்ப்புகள் உள்ளன. அப்புறம், ஆண்கள் ம ட்டுமல்ல மொத்த சமூகமே அப்படித்தான் உள்ளது.
தீராநதி: நீங்கள் கூறுகிற பெண்ணிய, தலித்தியக் குரல்களைத் தாண்டி முழுமையான கவிதைகள் என்று என்ன வந்துகொண்டிருக்கின்றன?
சமயவேல்: யவனிகா ஸ்ரீராம் அரசியல் பிரக்ஞை உள்ள கவிஞராக இருக்கிறார். ராணி திலக் வாழ்க்கை உள்ளீடுகள், சாயல்களை உள்வாங்கி எழுதுகிறார். ஸ்ரீநேசன் வாழ்வின் பல்வேறு வண்ணங்களைக் கண்டடைந்து எழுதுகிறார். அய்யப்ப மாதவன், ஸ்ரீசங்கர் போன்றவர்களிடம் புதிய மொழி உள்ளது. லீனா மணிமேகலை பெண் ணியம், உடல்மொழி தவிர பாலியல் சுதந்தரம் பற்றி எழுதுகிறார். தற்போதைய தமிழ்க்கவிதைகளை possitiveஆகவே பார்க்கிறேன். புதிய இளைஞர்கள் பழைய பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, விடுதலையாகி, புதிய கவிதா மொழியைக் கண்டடைந்துள்ளனர்.
தீராநதி: இதில் மரபான தமிழ்க்கவிதையில் இருந்து எடுத்துக்கொள்வது எப்படி இருக்கிறது?
சமயவேல்: 2000 வருடத் தமிழ்க்கவிதை மரபில் தற்காலக் கவிதை எங்கே நிற்கிறது என்று விக்கிரமாதித்தன் கேட்கிறார். அதுபோலவா?
தீராநதி: நான் கேட்க விரும்புவது சங்கம் முதல் பாரதி வரை தொடர்ந்த தமிழ்க் கவிதை கன்னி விடாமல் தொடர்கிறதா? தமிழ் வாழ்க்கை சங்கக் கவிதைகளில் உள்ளது. சங்கக் கவிதைகளை வாசிப்பதுகூட இன்று சில கவிஞர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. அது தேவையில்லை என்கிறார்கள். உலகக்கவிதை வாசிப்புமட்டும் போதாதா என்கிறார்கள். நான் மலினப்படுத்தப்பட்ட சந்தம், யாப்புகளைக் கூறவில்லை. 1970, 1980-களின் முக்கியக் கவிதைகள் என்பது மேற்கத்தியத் தத்துவங்களின் நகல்களாகத் தானே இருந்தது? மில்ட்டன், ராபர்ட் ஃபுரோஸ்ட், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன் என்று யாரையாவது பின்பற்றித்தான் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தோம். இ ன்று அதுபோல உலகக் கவிஞர்கள் இல்லாததுதான் தேக்கத்துக்குக் காரணமா?
சமயவேல்: 1970-களில் ஏற்பட்ட நெருக்கடியே இதுதான். கவிதையில் எந்த அளவு தத்துவம் இருக்கலாம்; இருக்கக்கூடாது என்ற விவாதம் எழுந்தது. தேவதச்சன், ஆனந்த் போன்றோர் அப்போது தத்துவத்தை நேரடியாக எழுதிக்கொண்டிருந்தார்கள். தற்போது தேவதச்சனின் குருவி கவிதைகள் எளிமையையும், அமைதியையும் கொண்டுள்ளன. அற்புதமானவை அவை. இருந்தாலும் கவிதைக்கும் தத்துவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வாழ்க்கையின் நித்தியமான உண்மைகளைக் கவிதைகள்தாம் சிறப்பாகக் கவனத்தில் கொள்கின்றன. வாழ்க்கையில் உள்ள புரியாத பகுதிகளைக் கொள்வதைத்தான் கவிதையும், தத்துவமும் செய்கின்றன. தற்போதும் அரசியல் கவிதைகளை எழுதித்தான் தீரவேண்டும். யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் அதைத் தொடங்கியுள்ளனர்.
தீராநதி: தற்போது உலகக்கவிதை என்னவாக இருக்கிறது?
சமயவேல்: தாவோ, ஜென் பாதிப்பில் சிலர் எழுதுகிறார்கள். உலகக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடிய யாரும் இன்று இல்லை. துணை உலகக்கவிஞர்கள்தான் உள்ளனர்.
தீராநதி: இதற்கு, மேற்கத்திய தத்துவங்கள் தோல்வியடைந்து வருவதும் ஒரு காரணமா? தற்போது உலகளாவிய தத்துவ உள்ளொளி என்று ஒன்று இல்லை அல்லவா?
சமயவேல்: தற்போது எல்லாம் பொட்டலம் கட்டும் தன்மையாகிவிட்டது. உள்ளீடற்ற, சாராம்சமில்லாத கூடாக உலகம் ஆகிவிட்டது. ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத் தையும் பயன்படுத்தித் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறோம். இதனால் அரசியல், தத்துவம், இசை எல்லாம் பயனற்றதாகி விட்டது. அப்புறம் செவ்வியல் காலம் முடிந்து வி ட்டது. பின் நவீனத்துவத்தில் எல்லாம் தகர்க்கப்பட்டுள்ளது. கட்டுடைப்பு எங்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குமுன் உடைக்க முடியாத நுண் அலகுகள் எல்லாம் உடைந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து புதிய மரபுகள் தோன்றும். தற்போது உலகம் முழுவதுமே ஒரு திரவ நிலை நிலவுகிறது. தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதிலிருந்து solid ஆன ஒன்று உருவாகும்.
தீராநதி: ஆனால், இன்று தலித்தியம், பெண்ணியம் போன்ற அடையாள அரசியல் காலத்தில் இன்னும் ஓராயிரம் நல்ல கவிதைகள் முகிழ்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்ப துபோல் தோன்றுகிறதே? அப்புறம், பல ஆண்டுகள் முன் பிரமிள் புதிய கவிதை இயக்கத்தைத் தொடங்கினார். இன்று அது தொடரவில்லை. புதிய கவிஞர்கள் பிரமிளை எவ்வாறு வாசிக்கிறார்கள்?
சமயவேல்: இன்று நிறையபேர் அவரைக் கொண்டாடுகிறார்கள். தத்துவத்தையும், அறிவியலையும் அழகியல் பூர்வமாகக் கவிதையில் இணைக்கும் முயற்சியில் பிரமிள் ஈடு பட்டார். அவர் அதி கவி. மிக முக்கியமான அறிவியக்கத்தின் சுடர் தோன்றி மறைந்துவிட்டது. உலகக் கலாசாரங்களின் ஒருமித்த குரலாகக் கவிதையை மாற்றமுடியுமா என்று முயற்சித்தார். எகிப்து, ரோமானியக் கலாசாரங்களில் இருந்து தனது அழகியலை எடுத்துக்கொண்டார். அவரது ஓவியங்களில் இதை வெளிப்படையாக அவதானிக்கலாம். அவரது கவிதைகளிலும் இது உள்ளது. தமிழ்க்கவிதை மரபுக்கு இது புதுசு. ஆனால், தமிழின் குழுவாதம் அதை வீழ்த்திவிட்டது. அவரது தீவிர கவிதை இயக்கத்தை அது திசை திருப்பிவிட்டது. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தை விரயம் செய்துவிட்டார். எதிர்
விமர்சனங்களால் தனிமைப்படுத்தப்பட்டார்.
தீராநதி: இன்று அனைத்து கருத்தாக்கங்களுக்கும் அதிகார மையங்கள் உருவாகி விட்டன. தற்போது அப்படி ஒரு ஆளுமை தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா?
சமயவேல்: பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன. அரசியல் மட்டுமல்ல. அகடமிக் சைடிலும் அதிகார மையங்கள் உருவாகியுள்ளன.
தீராநதி: இன்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமைகள் இல்லையே. Nomfiction எழுதுபவர்கள்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமையாக உள்ளனர். படைப்பாளிகளில் இத்தகைய ஆளுமைகள் இல்லையே?
சமயவேல்: எனக்கு அப்படியும் தோன்றல. ஏன்னா, அதையும் யாரும் வாசிப்பதில்லை. அ. மார்க்ஸ். எஸ்.வி.ஆர் போன்றவர்களுக்கு பொது வாசகர்கள் இல்லையே. வே ண்டுமானால் ரசிக மனோநிலை இருக்கலாம். இதனால் குட்டி, குட்டி அதிகார மையங்கள் உருவாகி வருகின்றன. இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உட்காரும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதைத்தான் தற்போதைய பலவீனமான நிலை என்று சொல்கிறேன். ஆனால். 1970-களில் இத்தகைய நிலை இல்லை. அப்போது முழு மையான ஆளுமைகள் இருந்தன. அது வசந்தகாலம் என்றே நினைக்கிறேன். அன்றைய படைப்பு ஆளுமைகளில் ஒரு ஒன்றிப்பு நிலவியது. அது சிறு பத்திரிகைகளின் காலம். அங்கு பரந்தாமன் போன்றவர்கள் சிற்றிதழ்களுக்காக உயிரைக் கொடுத்தார்கள். இடதுசாரி அரசியல் வீச்சு ஒரு பக்கமும், அதற்கு நிகரான தீவிர அழகியல் வீச்சும் நிலவியது. இரண்டுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியது. அந்த 1970-களின் காலம் திரும்ப வராதா என்ற ஏக்கம் இருப்பதாக கல்யாணிஜிகூட அண் மையில் எழுதியிருந்தார்.
தீராநதி: நீங்கள் 1970-கள் காலத்தைச் சேர்ந்தவர் இல்லையா? அதன் நினைவுகள் ...
சமயவேல்: நான் அக்காலத்தின் கடைக்குட்டி. அப்போது பரஸ்பர புரிதல் நிலவியது. சுந்தர ராமசாமி, நகுலன் சண்டைகள்கூட மிகப் பூடகமாக நடந்தது. முருகேச பாண் டியன், நான் போன்றவர்கள் நாகர்கோயில் போய் சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு, திருவனந்தபுரம் போய் நகுலனையும் பார்த்து வருவோம். எங்களுக்கு எந்த நெ ருக்கடியும் அப்போது இருந்தது இல்லை. இப்போது அப்படி நினைத்துப் பார்க்கமுடியுமா? நீல பதமநாபன், வண்ணநிலவன், கி. ராஜநாராயணன் போன்றவர்கள் பிரியமானவர்களாக இருந்தார்கள். அன்பு என்பது அப்போதைய முக்கியமான விழுமியமாக இருந்தது. அந்த பெருங்கலாசாரத்தில் இல்லாத அன்பு. அதற்கான நிரந்தர ஏக்கம் அப்போது அனைவரது மனசிலும் நிறைந்திருந்தது. அது பேரன்பு. அதை வேறு எப்படியும் சொல்லமுடியாததாக இருந்தது. அதைத்தான் அப்போது அனைத்து படைப்பாளிகளும் கொண்டுவர முயற்சி செய்தனர். இதற்காகத்தான் இதில் வெற்றி பெற்ற வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றோர் பின்னர் கிண்டல் செய்யப்பட்டனர். எனது சிறிய கவனிப்பு என்னவென்றால் வண்ணநிலவன், வண்ணதாசன் கதைமொழியை இன்றுவரை யாராலும் தாண்ட இயலவில்லை. அவர்களை எப்போதுமே நிராகரி த்துவிடமுடியாது, மிகப்பெரிய படைப்பான ஆழி சூழ் உலகுகூட வண்ணநிலவன் கதைமொழியைக் கடக்க முடியவில்லை. இன்று சரியான விமர்சனம் இல்லாததுதான் இதற்குக் காரணம். இதனால் சரியான படைப்புகளை அடையாளம் காட்ட யாரும் இல்லை. 1970-களைச் சேர்ந்தவர்களில் யாரும் யாரையும் நிராகரிக்காத தன்மை இருந் தது. ‘அவரும் 10 நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறாரய்யா’ என்ற கருத்து ஒவ்வொரு படைப்பாளிமீதும் இருந்தது. கருத்து வேறுபாடுகளைச் சேர்த்து அங்கீகரித்தனர். நானும் வண்ணநிலவனும் மிக நெருக்கமாகப் பழகினோம். ஒருவர் படைப்புகளை ஒருவர் என பரஸ்பரம் புகழ்ந்து கொண்டது கிடையாது. வண்ணதாசனும், கலாப்பிரியாவும் தங்களுக்குள் பரஸ்பரம் சொரிந்து கொண்டது இல்லை. துதிபாட மாட்டார்கள். படைப்புகள் பொதுவெளியில் இருந்தன. நாங்கள் படைப்புகளைப் பொது வெளியில் பார்த்தோம்.
தீராநதி: 1970-களின் கலையின் மையம் அன்பு என்று கூறுகிறீர்கள். தற்போது அப்படி ஒரு focus இருக்கிறதா?
சமயவேல்: தற்போது சூன்யம்தான் நிலவுகிறது. ஏதாவது குப்பையாகவாவது கரை ஒதுங்கவேண்டுமே? அப்படி ஒண்ணையும் காணோம். அன்பு என்பது நிலப்பிரபுத்வக் கூறாக இருந்தது. இன்று அத்தகைய சர்வதேச கூறு இல்லை. ஆனால், அரசியல் அப்படியேதான் இருக்கிறது. நான் கட்சி அரசியலைக் கூறவில்லை.
1. நுகர்வுக் கலாசாரம்
2. ஊடகத்தின் அசுர வளர்ச்சி
3. பண்பாட்டு இயக்கங்கள் இல்லாதது
4. தகவல் தொழிநுட்பம்
ஆகிய 4 புதிய கூறுகள் சூன்யத்தை உருவாக்கிவிட்டன. மீண்டும் 70-களின் காலத்துக்கே திரும்பலாம். அன்றைய செவ்வியல் இயக்கம் நியாயமானது. இன்று அதற்கான வாழ்க்கைத் தொடர்ச்சி இல்லை. பெரும் ஆளுமைகள், படைப்புகள் வெளிவருவதற்கான வாழ்க்கை இல்லை. வாழ்க்கை சிதறுண்டு கிடக்கிறது. முகம் இழந்து, விளிம்பு நிலையையும் தாண்டிய கேவலமான ஸ்திதி நிலவுகிறது. இந்த வாழ்க்கை வாழ்வதற்கும், எழுதுவதற்கும் உகந்ததாக இல்லை. கவிதை எப்போதும் வாழ்க்கையின் உள்பகுதி பற்றி ஆத்மார்த்தமாக எழுதுகிற அழகியலைக் கொண்டது. அது 1970-களுக்குப்பின் காணாமல் போய்விட்டது. 1990-கள் வரைகூட இது இருந்தது.
இன்று எல்லா இயக்கங்களும் சோரம் போய்விட்டன. இன்று தீவிரமான, மிதமான இயக்கம் எது என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று 4 இயக்கங்கள் வருகின்றன. தலித் இயக்கம் என்கிறார்கள். எல்லாம் சில்லுண்டியாக இருக்கிறது. குறிப்பிட்டு எதையும் சொல்லமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் இது பொருத்தமாக இ ருக்கிறது. இச்சூழலில் பெரும் படைப்பை எதிர்பார்க்க முடியாது. எல்லாரும் ஒவ்வொரு நாளும் சோரம் போகிறோம். 1947 இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது. அதுதான் சிறந்தது என்று ஆழ்மனதில் பதிந்துவிட்டது. இன்று யாருமே தமது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை. பழைய வாழ்க்கையில் இத்தகைய தியாகிகள் இருந்தனர். ஆனால், ஒரு வீட்டுக்குள் வாழ்பவர்கள் மத்தியில் கூட இன்று விட்டுக்கொடுத்தல் இல்லை. அப்படியிருக்கும் போது பொதுச் சொல்லாடல்கள் மூலம் எல்லாப் பிரிவுகளையும் ஊடறுத்துப்போவது சாத்தியமில்லை. ஊடகத்தின் பெருவளர்ச்சி மொத்த நேரங்களையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. எப்போதும் ஏதோ ஒரு சேனல் நமது ஏதாவது ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு விடுகிறது. நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து மொத்த சமூகமும் sணீபீவீst சமூகமாகிவிட்டோம் இல்லையா?. இல்லையென்றால் வடிவேலு அடி வாங்குவதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? இதனால்தான் மு ழுமையான ஆளுமைகளைவிட சிதறுண்ட சிறு ஆளுமைகள்தான் சாத்தியம் என்கிறேன். அதற்கு அடையாளமாக அவர்களின் புது மொழி உள்ளது. இது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தீராநதி: இந்தப் புது மொழி என்பது சில பெண்ணியக்கவிஞர்கள் தவிர வேறு யாரிடம் நம்பிக்கை ஏற்படுத்துகிறது? மொத்தச் சூழலுமே மிகச்சிறிய வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகால சமூக வாழ்க்கை பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தாலும் சாதிய அடையாளம் சார்ந்த விழுமியங்கள்தான் (நான் இங்கு தலித் சாதிகளைக்கூறவில்லை) இன்று படைப்பாளிகளிடம் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.
சமயவேல்: தமிழ் வாழ்க்கையின் நுண் அலகுகள் சாதியால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் துவம்சம் செய்யவேண்டும். அத்தகைய நினைப்புகளும் இருக்கிறது. ஆனால், குடும்பம் என்ற கேவலமான யூனிட்டைப் புனிதமாக பேணிக்காக்கிறோம். இத்தகைய நுண் அலகுகளையும் அடித்து நொறுக்கவேண்டும். இதை இலக்கியம்தான் செய்யமுடியும். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலில் சோரம் போகும் அம்மாவை இயல்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எத்தகைய பெண்ணையும் புரியும் மனநிலையை நான் பெறுகிறேன். இத்தகைய soft எழுத்துகள் வரவேண்டும்.
தீராநதி: ஆண் எழுத்தாளர்கள் பெண்ணிய எழுத்துகளையும், பிற சாதிகளில் பிறந்த எழுத்தாளர்கள் தங்கள் சாதிகளைத் துறந்து தலித் எழுத்துகளையும் தோளில் சுமந் தால்தான் இது சாத்தியம். எழுத்தில் இத்தகைய intersections எப்போது சாத்தியம்?
சமயவேல்: அப்படியான காலம் நெருங்கிக் கொண்டுதான் உள்ளது. பெண்ணிய எழுத்தாளர்கள் மொத்த வாழ்க்கையைப் பதிவு செய்யத்தொடங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
தீராநதி: உரையாடலை இப்படி மாற்றலாம். ஒரு ஆண் தனது பாவத்துக்கு விமோசனம் தேடுவது போல தனது ‘புத்துயிர்ப்பு’ நாவலை டால்ஸ்டாய் ஆரம்பிக்கிறார். பாவவிமோசனம் தேடும் பயணம் 800 பக்கங்களுக்கு விகசிக்கிறது. இப்படி ஒரு தேடல், பயணம் தமிழில் இல்லாமல் போனது ஏன்?
சமயவேல்: அது இல்லாததால்தானே தமிழில் படைப்புகள் மொக்கையாக இருக்கின்றன. மொக்கை என்ற புதிய சொல்லையே தமிழ் நாவல்கள் உருவாக்கிவிட்டன. மொக்கை என்ற சொல் useless என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சரி, சமுதாயம் மொக்கையாக இருந்தால் அதைத்தானே எழுதுவார்கள். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அதைத்தான் எழுதுகிறார்கள். ஆனால் இது மிகப் பெரிய வாசக வன்முறை. 1000, 2000 பக்கங்கள் எழுதுகிறார்கள். அதை முழுதாகப் படித்து என்னதான் ஆகப்போகிறது. பிறகு, ஏன் வரலாற்று நாவல்களை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் வரலாறு எனக்குச் சுமையாகத்தான் இருக்கிறது.இது மலத்தில் அரிசி தேடும் முயற்சிதான். நவீன வாழ்க்கை பெரும் படைப்புகளைத் தருவதற்கானதாக இல்லை. உலக அளவிலும் வரலாற்று நாவல்கள்தான் எழுதுகிறார்கள். இதை மீறுவதற்கு பெரும் வீரியம் வேண்டும். நாம் நமது பால்ய காலத்தில் வாசித்த பொன்னியின் செல்வன் ஒரு ரொமாண்டிசம். அப்போது வரலாற்று நாவலே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். அரசு ஆவணக்காப்பகங்களில் கெசட்டியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கிறார்கள், மியூசியங்களில் எலும்புக்கூடுகளைத் தேடுவதைப்போல. பின் எலும்புக்கூடுகளுக்கு மேல்பூச்சு பூசி வரலாற்று நாவல்களாக உலவவிடுகிறார்கள். creativity கூடக்கூடப் பக்கம் குறையும். படைப்பூக்கத்தின் வறுமைதான் பக்கங்கள் அதிகரிப்பதன் காரணம். இன்றைய இளைஞர்கள் இந்த மொக்கைகளை வாசிக்கப்போவதில்லை. இப்போது you tube காலம். அவர்கள் கைகளில் அனைத்துத் தகவல்களும் உள்ளன. அவர்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதுதான் இன்றைய படைப்பின் சவால். இன்றைய நவீன வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதினால் போதும் நவீன சிக்கல்கள் அனைத்தையும் கொண்டுவந்துவிடமுடியும்.
தீராநதி: 60 நொடி விளம்பரப்படத்தில் மனிதனின் பரிணாம வளர்ச்சி மலினப்படுத்தப்பட்ட வடிவில் காண்பிக்கப்படுகிறது. தகவல்கள் என்பது ஊடகச் சாயம் பூசப்பட்டு கு ழந்தைகளைச் சென்றடைந்து கொண்டே இருக்கின்றன. இன்று பூமியில் ஒரு பெரும் நிகழ்வு நிகழ்ந்தால் அடுத்த 5 நிமிடங்களில் அதன் பூர்வ காலத் தகவல்கள் முதல் அனைத்தையும் பெற்றுவிடமுடிகிறது. இவ்வாறு ஊடகங்கள் வளர்ந்துள்ள நிலையில் எழுத்தில் விவரணைகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இணையம் வந்த பிறகு வாசிப்பு scaning ஆகிவிட்டது. இதுதான் புதிய எழுத்தின் சவால் என்று நினைக்கிறேன்.
சமயவேல்: அவ்வாறு ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆயிரம் பக்கத்தில் மொக்கை நாவல் எழுதுகிறார்கள் போல. டூமாஸ் கேலி செய்த வரலாற்றைத்தான் அவர் காலத்துக்கும் பின்னர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு தீவிரமாக மறுக்கிறேன் என்றால், வரலாறு என்பது எப்போதும் சார்பு நிலை கொண்டது. ஆளும் வர்க்கம் சார்ந்ததாகவே வரலாறு உள்ளது. புனைவுதான் இதைவிட மிகவும் சிறந்தது. சிலப்பதிகாரம் போன்ற பெருங்கதையாடல்கள் தன்னளவில் மிக வும் அற்புதமாக உள்ளது. அது மிகச் சிறந்த புனைவு. பிறகு இவர்கள் அதை ஏன் மீண்டும், மீண்டும் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. அகலிகையை கு.ப.ராவும், பு.பி.யும் எழுதினார்கள். அது அசலான கதைகள். அதில் ஒரு விஷயம் உள்ளது. அது வரலாற்றுப் புனைவு என்றும் சொல்லமுடியாது. அதில் வேறு ஒரு கேள்வி உள் ளது. ‘கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே..’ என்று பு.பி. பொன்னகரத்தில் எழுதியதை மீறி, சொல்ல என்ன இருக்கிறது.
தீராநதி: வரலாற்றுப் புதினம் என்பது recreation என்கிறார்கள். அப்படியானால் வால்மீகி ராமாயணம் குறித்த அக்காலத்திய சரியான விமர்சனம்தான் கம்பராமாயணம். அதனால்தான் ஜீவா போன்ற நாத்திகர்கள் அதற்குள் travel செய்ய முடிந்தது. அதுபோன்ற travel ஆக இன்றைய வரலாற்றுப் புதினங்கள் இருக்கிறதா?
சமயவேல்: நிச்சயமாக இல்லை. பொதுவாகவே 90-க்குப் பிந்தைய மொத்த இலக்கியப் போக்கில் திருப்தி இல்லை. நிறைய நல்ல படைப்புகள் இல்லை. மிகக் கொஞ்சமாக த்தான் உள்ளது. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. 1970-களில் தொட்ட உச்சத்தை யாருமே தொடவில்லை. அவர்களுக்கு இருந்த பார்வை தர்சனம் இவர்களுக்கு இ ல்லை. எப்படியாவது நிறையபேர் வாசிக்கிற பண்டமாக மாற்ற வேண்டுமே என்ற மலினமான, வெகுஜனப் பத்திரிகைத் தன்மைதான் தெரிகிறது. இதையும், தனது சொந்த இருப்பு குறித்த சண்டைகள் மற்றும் தந்திரங்களைக் கைவிட்டால்தான் அதைக் கண்டடைய முடியும்.
தீராநதி: கட்டமைக்கப்பட்ட புனிதமாகவே வரலாறு உள்ளது. வரலாற்று அபத்தங்கள் என்ன என்றே நமக்குத் தெரியாது. வரலாற்றில் நடந்த அபத்தங்கள் தெரியாமல் வரலாற்றை எப்படி படைப்பாக்க முடியும்?
சமயவேல்: தமிழில் வரலாறு குறித்த புனைவில் ஈடுபடுபவர்களுக்கு அது தெரியாது. பொதுவாக, உள்ளீடற்ற சமூகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப எதிர்பார்க்கப்படும் படைப்புகளும் உள்ளீடற்றதாகவே உள்ளன. இதை எதிர்க்க பெரும் வீரியம் வேண்டும். அவ்வாறு சமீபத்தில் வெளிவந்துள்ள ஆளுமைகளாக அ. முத்துலிங்கம், கோணங்கி, முருகபூபதி, ஹரிகிருஷ்ணன்(மணல்மகுடி), ஆதவன் தீட்சண்யா, திருச்செந்தாழை ஆகியோர் புதிய மொழியையும், புதிய உள்ளடக்கத்தையும் உருவாக்குகிற க ட்டாயத்தில் இருப்பவர்கள். கவிதை பற்றி ஏற்கெனவே கூறிவிட்டேன்.
தீராநதி: கோணங்கி மொழி குறித்த சர்ச்சை உள்ளதே?
சமயவேல்: ஆமாம். அவர் எங்களுக்காக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் communicativeஆக எழுத வேண்டும். அப்போது அவர் மொழி புதியதாக இருக்கும்.
தீராநதி: 1970-களில் இருந்து தமிழில் முக்கிய இலக்கியச் சூழலாகக் கருதப்பட்ட மதுரை, நெல்லை, சென்னை, கோவில்பட்டி ஆகியவற்றில் தொடர்ச்சியாக 1980-களின் இறுதிவரை வாழ்ந்துள்ளீர்கள். அச்சூழல்கள் உங்களிடம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின?
சமயவேல்: நான் பிறந்தது கரிசல் பூமி. விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர். நான் வளர்ந்தது பெரும்பாலும் எனது அம்மா முனியம்மா பிறந்த வேம்பாரப்பட்டி. என் அம்மாவின் அப்பா சிறந்த சேவற்சண்டைக்காரர். சேவற்கட்டுக்காரர் என்று சொல்வார்கள். இருபது சேவல்களை ஜெயித்து தோலில் போட்டு வருவதை நான் பார்த்தி ருக்கிறேன். தினசரி கோழிக்கறிதான். பிள்ளைப்புதூர் பள்ளியில் படித்தேன். லீவு நாட்களில் வேம்பாரப்பட்டி தாத்தா வீடும், தோட்டமும் தான். தாத்தாவுடன் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்போம். அதனாலே பின்னாட்களில் எனக்கு தக்கையின் மீது நான்கு கண்கள் எனக்குப் பிடித்த கதையானது. அந்தத் தோட்டத்தில் தான் என் பால்ய சகியைச் சந்தித்தேன். திடீரென என் அம்மாவின் சாவு என்னை மிகவும் பாதித்தது. வேம்பாரப்பட்டியில் இருந்து பிரித்துவிட்டது. பள்ளியில் தையல் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். பிளாட்டோ, சாக்ரடீஸ் புத்தகங்களைக் கொடுத்தார். சாமிநாதசர்மா எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் பள்ளியில் படிக்கும்போதே வாசித்துவிட்டேன். எனக்கு சி.பி.எம் கட்சிக்காரர்கள் அறிமுகம் கிடைத்தது. எப்படியும் புரட்சிக்காரன் ஆகவேண்டும் என்று நினைத்தேன். எங்கள் ஊருக்கு அருகில் பந்தல்குடி என்ற ஊர் உண்டு. அங்குதான் அரசு நூலகம் இருந்தது. அங்கு சென்று புத்தகங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு வந்தேன். எங்கள் ஊருக்குவரும் போஸ்ட்மேனிடம் தினசரி ரெண்டு புத்தகங்களின் பெயர்களை எழுதிக்கொடுத்து பந்தல்குடி நூலகத்தில் இருந்து வாங்கிவருவார். அதை அன்றே வாசித்து விடுவேன். கம்மாய்க்கரை மரத்தடி, கமலைக்கல், பேய் நடமாடும் ஊர்க்கோடிக் கோயில், மறுநாள் அதைக்கொடுத்து விட்டு வேறு இரண்டு புத்தகங்களை வாங்கிவருவார்.
மதுரையில் கல்லூரிப் படிப்பு. முருகேசபாண்டியன் அதே கல்லூரியில் படித்தார். ஐ.சி. பாலசுந்தரம் என்ற அருமையான ஆசிரியர் கிடைத்தார். அவர்தான் எங்கள் ரசனைகளை வளர்த்தவர். காமு, காப்காவை அறிமுகப்படுத்தினார். நல்ல சினிமா என்றால் என்ன என்பதை உணர்த்தினார். அவர் அபி, மீரா, அப்துல்ரஹ்மான் ஆகியோரின் கல்லூரித்தோழர். அவர் மூலம் மதுரை இலக்கியத் தோழமை வட்டத்தின் பரிச்சயம் கிடைத்தது.
ஜி. நாகராஜன் தங்கியிருந்த சந்தானம் லாட்ஜுக்குச் செ ல்வேன். நான் சின்னப்பையன். விரட்டிவிடுவார். இடையில் கல்லூரிப்படிப்பு தடைப்பட்டது. மீண்டும் பாளையங்கோட்டையில் தொடர்ந்தது. அங்குதான் ஜோதிவிநாயகம் எ ன்ற என் அருமையான நண்பனைச் சந்தித்தேன். அவர் லெண்டிங் லைப்ரரி நடத்தினார். ரெண்டு பேரும் வீடுவீடாக புத்தகம் போடுவோம். பிறகு விடிய விடிய பேச்சு. நம்பிராஜன்(விக்கிரமாதித்தன்), வண்ணநிலவன், கலாப்பிரியா, கி.ரா, வண்ணதாசன் ஆகிய நண்பர்கள். நாகர்கோயில் சென்று சுந்தரராமசாமி, திருவனந்தபுரம் சென்று நகுலன் என்று 1970-களின் ஜாம்பவான்களோடு நட்பு வட்டம் விரிந்தது.
1976 இல் சென்னை வந்தேன். சென்னையின் முக்கிய காலகட்டம் அது. அங்குதான் தீவிர அரசியல் பரிச்சயம் கிடைத்தது. ராஜதுரை சோறும் போட்டு, சொல்லியும் கொடுத்தார். வண்ணநிலவன் துக்ளக்கில் சேர்ந்தார். பாதிநாள் அவரது வீடு. சந்திரா அன்பை மறக்கமுடியாது. இவர்கள்தான் என் parents. பிரமிள் பழக்கம் ஏற்பட்டது. எங்கு சென்றாலும் அவருடன் சுற்றுவேன். நவீன நாடகம், நல்ல சினிமாக்கள், இசை என்று மிக முக்கியமான கலைகளின் வசீகரத்தினை அப்போதுதான் உணர்ந்தேன். தீவிர அரசியலில் இருந்தேன். அரசு ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது. தாங்கமுடியவில்லை. இதனால் அரசு வேலையில் சேர முயற்சி செய்தேன். 1981இல் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் மாற்றல் வாங்கிக்கொண்டு கோவில்பட்டி வந்தேன். கோயில்பட்டியில் தீவிர காலத்தில் அவர்களோடு நானும் சுவாசித்தேன்.
1947இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது.
காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை!
பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன.
o
12 டிசம்பர் 2011
கண்களின் சிரிப்பு
சற்று முன் தட்டுப்பட்டு
கைவசமான
கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தில்
சிரித்துக் கொண்டிருந்த கண்களின்
முகத்தை என்
அலுவலக வளாகத்தின்
அடுத்தொரு மாடியில்
அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.
கச்சிதமான சிரிப்புடன் அமைந்த
புகைப்படத்தின்
கடைசி நகலாக அது இருக்கலாம்
இன்னொன்று அதே போல்
இயலுமா என்பது சந்தேகம்தான்.
எதிர்வரும் ஒரு சந்திப்பில்
கொடுக்கும்பொழுது
எப்படி எதிர்கொள்ளும்
இந்த முகம்?
இத்தனையும் யோசித்திருந்தவனை
பார்த்து
இன்னமும் மாறாதிருந்தது
அந்த கண்களின் சிரிப்பு.
o
கைவசமான
கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தில்
சிரித்துக் கொண்டிருந்த கண்களின்
முகத்தை என்
அலுவலக வளாகத்தின்
அடுத்தொரு மாடியில்
அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.
கச்சிதமான சிரிப்புடன் அமைந்த
புகைப்படத்தின்
கடைசி நகலாக அது இருக்கலாம்
இன்னொன்று அதே போல்
இயலுமா என்பது சந்தேகம்தான்.
எதிர்வரும் ஒரு சந்திப்பில்
கொடுக்கும்பொழுது
எப்படி எதிர்கொள்ளும்
இந்த முகம்?
இத்தனையும் யோசித்திருந்தவனை
பார்த்து
இன்னமும் மாறாதிருந்தது
அந்த கண்களின் சிரிப்பு.
o
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




