05 செப்டம்பர் 2009

பெண் கவிதைகள் மூன்று

பெண் - 1

நகைப்புடைவைக் கடைகளில்
பெண்கள் என்ற வரிகளோடு
தொடங்கிய கவிதையை
தொடராமலே வைத்திருக்கிறேன்
இன்னமும்.

0

பெண் - 2

இயற்கை கூந்தல் மணம் என்ற
வரிகளுக்கான கவிதையும்
இன்னமும் அப்படியே
இருக்கிறது கிடப்பில்.

0

பெண் - 3

குளிர்மழை நாளொன்றின்
குவாலிஸ் பயணத்தில்
மனைவியின் தோளில்
உறங்கியபடி இருந்த
மகனின் தலைக்குமேல்
சாலையில்
பேருந்து நிறுத்தமொன்றில்
கணநேரம் காட்சி தந்து
மறைந்த முகம்
கண்டிப்பாய்
அவளுடையதில்லை.

0

(நன்றி: Keetru.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக