29 ஏப்ரல் 2009

வன்கொடுமையில் வாழும் மனது...

பூமலரும் பொழுதுகளில்
புல்லாங்குழல் இன்னிசையில்
பனித்துளியின் புதுப்பொலிவில்
பேரின்பப் பெருவெளியில்
வெண்ணிலவின் தண்ணொளியில்
பெண்ணவளின் கண்ணசைவில்
கொடியிடையின் நடையழகில்
இடைதாண்டும் ஜடையழகில்
மின்மினியின் கண்சிமிட்டலில்

வந்து விழும் வரிகள் அறியா(து)
வன்கொடுமையில் வாழும் மனது.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக