30 ஏப்ரல் 2009

தருணங்கள்..

முன் எப்போதோ நான்
முன்வைத்த யோசனையாம்.
முற்றிலும் நினைவிலில்லை.
வாங்கிய இடமொன்று நல்ல
விலை இப்போதென்று
கண்களில் ஒளிகொண்டு
கைகளைப் பிடித்தபடி
கடைத்தெருவில் ஒரு நண்பன்.

மகனுக்கு வாங்கிவந்த
மாநிற உடைகுறித்து
மற்றெப்போதும் போலன்றி
மனம்குளிர்ந்த வாழ்த்துக்கள்
மனைவியிடம் வீட்டில்.

இயல்பாய் நிகழும்
இதுபோன்ற தருணங்களில்
இளைப்பாறி களைப்பாறும்
இல்வாழ்வின் நிகழ்கணங்கள்.


o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக