29 ஏப்ரல் 2009

இன்று...

இன்று
சமையல் கியாஸ்
தீர்ந்து விட்டது.
இன்று
மார்கழி மாதக் குளிர்
சில்லிட்டு இருந்தது.
இன்று
சாலையில் பார்த்த
ஒருவன் இடதுகண் மூடிக்
கட்டுப்போட்டிருந்தது.
இன்று
(இதுவரை சிரிக்காத)
நண்பன் ஒருவனின்
இடைவிடாத சிரிப்பைக்
காண நேர்ந்தது.
இன்று
வந்த கடிதமொன்றில்
நண்பன் தன்
முதல் மனைவியின்
நினைவு நாள்
நாளை என்று
எழுதியிருந்தான்.
இன்று
எழுத முயன்ற
கவிதையில்
பெரிதும் சோகம்
கவிழ்ந்தது.
இன்று
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக் கொண்டது.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக