30 ஏப்ரல் 2009

எதைச் சொல்வீர்கள்?...

ஆசையே துன்பத்துக்கு
காரணம் என்று புத்தன்

ஆசைப்படாதவற்றால் ஆகிவராது
துன்பம் என்பது வள்ளுவன்

பலனை எதிர்பார்க்காதே
பகவான் கீதையில்

இங்கேயே இப்பொழுது
இரு என்று ஓஷோ

பற்றற்று இரு என்று
பலப்பல ஞானிகள்

எதைத் தின்றால்
பித்தம் தெளியும்

என்றிருப்பவனுக்கு
எதைச் சொல்வீர்கள்?

0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக